Sunday, March 25, 2018

புரிந்துகொள்ளுமா? புலமும் புலம்பெயர் தேசமும்

புரிந்துகொள்ளுமா? புலமும் புலம்பெயர் தேசமும்


புலமாண்ட புகற்றமிழ் யுகந்தாவ
        புற்றீசல் புல்லரின் அகந்நோவ
புற்றுக்குள் புகும்பாம்பு ஈழம்புக
        புலிப்படை எனத்தமிழ் வேழம்புக
புத்தன்பேர் சொல்லிப்புற முதுகுப்போர்
        எத்தனைபேர் குத்தப்பட்டனர் எண்ணிப்பார்

மெல்லிய பூக்கள் இறுகுமோ
        மென்மைத் தமிழச்சி முறுக்கினாள்
புலியென புருசன் ஒருபுறம்
        அரளியாய் அவளே மறுபுறம்
வெலத்தது சிங்களம் மொத்தமும்
        புகுந்தது விதிமீறல் யுத்தமும்

பாடசாலை வைத்தியசாலை தமிழெதோ
        வீடுவாசலும் ஊரும்பேரும் தமிழெதோ
நின்றதுபோரென கூட்டம் கூட்டி
        குண்டுகள் விதைத்தான் கோத்தி
கோழியும் குஞ்சும் சேவற்பேதம்
        அறியாக்குண்டு வெடிக்க அய்யோச்சத்தம்

மாண்டாள் தாயென அறியாப்பிஞ்சு
        மார்பைக் கடித்ததே பாலுக்கு
சிக்கிய தமிழன் சிங்களன்முன்னே
        அம்மணம் ஆனான் சாவுக்கு
ஈழக் குயிலாம் இசைப்பிரியா
        இரையாய் ஆனாள் இச்சைக்கு

மிச்சம்வாழ புலங்கள் பெயர்ந்து
        கடலைநம்பி படகை விட்டது
கடலில்பாதி தரையில்மீதி விழவே
        அகதியேகதி அடைக்கப் பட்டது
புலமிச்சம் இராணுவக் காப்பில்
        பாலுக்கு காவல் பூனையாம்

இனியுமில்லை இழந்திடவே
இருப்பதெல்லாம் உயிரதுவே
அங்கம்மேயும் ஆண்மகனே
தாயதுநகலே எனக்கும்
புரிந்துகொள்ளுமா?
புலமும் புலம்பெயர் தேசமும்...

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...