Saturday, March 17, 2018

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம்
(இக்கவிதையை திரைப்படப்பாடலின் ராகத்திலும் பயணிக்க வைக்க முடியும்)


காலங்களில் அவள் வசந்தம்..!
ஞாலத்திலே புது காவியம்..!
வானத்திலே அவள் வெண்ணிலா..!
தரையினிலே அவள் தேர்உலா..!

பாடங்களில் அவள் தேன்தமிழ்..!
மாடங்களில் பாடும் பெண்குயில்..!
அழகினிலே அவள் தேவதை..!
அன்பினிலே அவள் காதல்மழை..!

கலைகளிலே அவள் ஆயக்கலை..!
சிலைகளிலே அவள் மெழுகுச்சிலை..!
குழல்களிலே அவள் புல்லாங்குழல்..!
மடல்களிலே அவள் ரோசாஇதழ்..!

வெண்பாவிலே அவள் இன்னிசை..!
பண்பாட்டிலே அவள் தமிழிசை..!
வனங்களிலே அவள் மான்வகை..!
சினங்களிலே அவள் தேள்வகை..!

ஆடலிலே அவள் ரம்பைக்குநேர்..!
தேடலிலே அவள் தாயுக்குநேர்..!
கூடலிலே அவள் பசைக்குநேர்..!
நாடலிலே அவள் குழந்தைக்குநேர்..!

கடிதங்களில் அவள் காதல்வரி..!
காதலுக்கு அவள் முகவரி..!
மேகத்திலே அவள் கார்முகில்..!
தேகத்திலே அவள் அழகுமயில்..!

மணங்களிலே அவள் மல்லிச்சரம்..!
கற்பனையில் அவள் கவிச்சரம்..!
திருவிழா வந்தால் தீபஒளி..!
தியாகத்திலே அவள் தீக்குச்சி..!

மலர்களிலே அவள் பொற்றாமரை..!
மலைகளிலே அவள் நீலகிரி..!
தொல்லையிலே அவள் காதல்தொல்லை..!
வெள்ளையிலே அவள் மனதேவெள்ளை..!

மொத்தத்திலே அவள் காதலி..!
கண்மணியே! என்னைக் காதலி. !

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...