Friday, March 9, 2018

சோறு கொண்டு போற புள்ள

சோறு கொண்டு போற புள்ள
நடையப்பாத்து காலுகொலுசு தாளம் போடுது - அட
வேலையப்போட்டுட்டு மாமன்கண்ணு ஒன்னத் தேடுது
சேலைலநூலா ஆகத்தானே பருத்தி ஏங்குது - உன்
மனசுலதங்கி வாழத்தானே நெஞ்சே விரும்புது

சோறுகொண்டு போறபுள்ள என்ன சோறுடி - உன்
மாமன்காரென் இங்கருக்கேன் இங்கிட்டு வாயடி
என்னவெஞ்சனம் கொண்டுவந்த எடுத்து வையடி - ஏதும்
இல்லையின்னா கடிச்சிக்கிட கன்னம் தானடி

கொழம்புலஏன்டி இம்புட்டுகாரம் ஒரைக்குது நாக்குடி - உன்
ஒதட்டுலஓடும் வெள்ளப்பாகு அள்ளித் தாயடி
சக்கரநோயி வந்துடப்போகுது முத்தம் போதும்டி - நான்
நித்திரபோட நெஞ்சப்பாயா விரிச்சுப் போடடி

கண்டாங்கில கண்டமுன்னு தெரியாமப் போச்சுடி - உன்
முந்தாங்கில முடிச்சுப்புட்ட வெளைச்சல் ஆச்சடி
இப்புடியே செத்தாக்கூட ஏதுங் கவலையில்ல - ஊர்க்கு
சோறுபோட புள்ளருக்கான் வெவசாயி வீட்டுப்புள்ள

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...