Friday, March 9, 2018

இரவல் இதயம்

இரவல் இதயம்
இல்லாரில் இருப்பதுவோ இரவல் இதயம்
இருப்பாரில் இல்லாதது ஈகை இதயம்
இரப்பாரின் கந்தைவழி அங்கம் தெரியும்
இவ்வங்கம் இரந்திடவே சிலகண் திரியும்

இரக்கும் பெண்ணவள் இரவல் கேட்க
இரந்து கேட்கவுளர் பெண் உடம்பை
இரக்கும் பெண்ணெனினும் ஈவாளோ உடம்பை
இரும்பிலவே வலுக்கொள இழந்தாள் உடலை

இல்லாரை மிரட்டி பிள்ளை இரந்து
இருப்பதை உடைத்து ஊனங்கள் உடுத்து
இறக்கியதே சாலையில் கூட்டம் பணமிரக்க
இடித்ததே எதிர்காலம் அவர்கரம் பணமிருக்க

இல்லையே உணவென இருப்பவர் பல
பெற்றார் பேரறியா குளவிகளும் உள
இல்லங்கள் இயக்கும் இதயத்தில் சில
புரவலர் புரக்கும் நிதிக்காய் உள

இருக்கும் போதும் இரக்கும் அவலம்
இறந்ததை வாங்கவும் இரக்கும் உலகம்
கயமையாற்ற இருப்பார் ஈகிறார் இங்கே
பசியையாற்ற இல்லார் முனைகிறார் கயமையே

ஐந்தாம் ஆண்டே அடுத்தது வரும்
ஐக்கியமே அந்தநொடி இரவல் கூட்டம்
காலைப் பிடிக்கும் கையைப் பிடிக்கும்
கோட்டை பிடிக்கும் ஈகைமறக்கும் மறுக்கும்

பிறப்பும் இரவல் மரத்திடம் மூச்சிரவல்
உண்டுடுப்பது இரவல் இருந்தீவதும் இரவல்
ஈகைநல்லாள் பூமியில் இரவலே இதயம்போலே
அனைத்துமிரவலே அதில்கொஞ்சம் ஈவாய் மனிதா

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...