Tuesday, September 11, 2018

அவளும் நானும்!

அவளும் நானும்!


அவளும் நானும்,
வானும் மண்ணும்!
அவள் வான்!
நான் மண்!
வானம் சிந்தும் மழைத் துளிக்காய்
அவள் சிந்தும் காதல் துளிக்காய்
காத்துக் கிடக்கும்
வானம் பார்த்த வயல்வெளி நான்!


அவளும் நானும்,
நிலவும் இரவும்!
அவள் நிலவு!
நான் இரவு!
நிலவு ஏற்றி வைக்கும்
நிலவொளிக்காய்
அவள் ஏற்றி வைக்கும்
என் வீட்டு விளக்குக்காய்
காத்துக் கிடக்கும்
தினந்தோறும் வந்து நிற்கும்
இரவு நான்!


அவளும் நானும்
கடலலையும் காலடியும்!
அவள் கடலலை!
நான் காலடி!
காலடி தொட்டிடும்
கடலலையின் தழுவலுக்காய்
அவள் விழியலை
என் விழி மோதிடும் ஆவலுக்காய்
காத்துக் கிடக்கும்
இதயத்தின் காலடி ஓசை நான்!


அவளும் நானும்
பூவும் காற்றும்!
அவள் பூ!
நான் காற்று!
பூ மணம் நுகர
பூவுக்குள் நுழைவதற்காய்
அவள் கரம் பற்ற
அவள் மனம் நுழைவதற்காய்
காத்துக் கிடக்கும்
என்னுடைய மூச்சுக் காற்று நான்!


அவளும் நானும்
முகிலும் மலையும்!
அவள் முகில்!
நான் மலை!
முகிலால் குளிர
முகிலின் மழைக்காய்
அவள் பார்வை முகிலின் குளிச்சிக்காய்
காத்துக் கிடக்கும்
மலைக் குன்றுகளின்
தலை உச்சி நான்!


அவளும் நானும்!
நானும் அவளும்!
அவள் நான்!
நான் அவள்!
ஆழமான மனதில்
நுழைந்திட்ட இம்சைக்காய்
மூடி வைத்த இதயக்கதவை
உடைத்தெறிந்த காதலுக்காய்
காத்துக் கிடக்கும்
நானும் அவளும்!


அவளும் நானும்
அமுதும் தேனும்!


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...