Tuesday, September 11, 2018

தாவணிக்காலக் கனவுகள்

தாவணிக்காலக் கனவுகள்



வெட்கத்த பூட்டத்தான் வழியேதும் இருக்கா?
வந்து சொல்லடி சிநேகியே
அந்தக்காலக் கதை சொல்லி அறுக்குற
கெழவியக் கூட்டிட்டுப் போ வெளியே


ஓலை அனுப்புன அடுத்த வண்டியில
மாமன் வந்துட்டான் குச்சுக்கட்ட - என்
மாமன் வயசுக்கு வந்ததேதி கேளு
நான் போறேன் அவனுக்கு குச்சுக்கட்ட


மூஞ்சிய மூடுன தாவணிக் குள்ளேயும்
நூலிடுக்குல குட்டிச்சன்னல் - அந்த
சன்னல என்கண்ணு தாவிக்குதிக்குது - அது
மாமன்மேல நான் வச்சகாதல்


தாவணி மிச்சமா விட்ட இடுப்புல
சந்தைக்கு வந்த மாமங்கையி
கண்ணுல கையில காமம் ஏதுமில்ல
அதனால தப்பிச்சான் பொடிப்பையன்


தாவணி எப்பத்தான் சேலையா மாறும்
காத்துக் கெடக்கேன் என்மாமனுக்கு
தாலியக் கட்டுன அப்புறம் நான்புருசன்
பொஞ்சாதி எனக்கு மாமங்காரன்


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...