Tuesday, September 11, 2018

காதலாகிய கவிதை!

காதலாகிய கவிதை!
 
வந்தோம்; உண்டோம்!
எனும் வண்டினம்,
இதோ!
பூவனம் சுற்றி
பூவெழில் கிறங்கி
மதுகொண்ட மலர்முன்னே
மதுவுண்ணாது மயங்கிடுதே!
பாடத்திலக்கியம் பயின்ற
இளவல்கள்
பட்டம்பெற்ற பின்னரே,
இதோ!
உண்மையான இலக்கியத்தேடல்!


தற்கொலை வேண்டாமென
தாவிப்பிடிக்கிறது,
பனித்துளியைப் புல்நுனி!


கண்ணில் மண்தூவாது
களவாடும் கதிரிடம்
கத்தியின்றி ரத்தமின்றி
நீர்மீட்ட குளிர்காற்று!


பூச்சிகளின்
கால்களில் ஒட்டிச்சென்று
களவுமணம் புரியும்
மகரந்தங்கள்,
மணம்வீசும் மலர்களாய்!


சுற்றலென்பாரைப் பொய்யாக்கி
நிலையாய் பூமியும்
விழுந்தெழும் வெய்யோனும்
மந்திரவாதிகள்!


கயிறின்றி
கடலைக் கட்டியிழுக்கும் காற்று,
ஏதுமறியாததாய்
உடல்நுழைகிறது அப்பாவியாய்!


அடடா!
இன்னும் எத்தனை காட்சிகள்?
இந்தக் கவிதைகளில்!


இதக்காற்றின் இச்சையில்
இதழ்விரித்த மயில்தோகையென
கவியிச்சையில்
விரிகிறதே இமைத்தோகை!


காதலியிருப்பவனுக்கு
ஒற்றைக்காதலி!
காட்சிகளை ரசிக்கப்பழகியதால்,
ஒவ்வொரு கவிநூலும்
என்காதலி!
கவிதையில் காதலாகிப்போன
காதல் மன்னன் நான்!


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...