Tuesday, September 11, 2018

உயிரில் கலந்த உறவே!

உயிரில் கலந்த உறவே!
 

உயிர்க்கும் முன்பே எனையே
உயிர்மெய் சுமந்த தாயே!
உயிரை யொழிக்குந் தொழிலே
உடனே முடக்கச் சொலலே!


உரிமை யெமக்கும் உளதே!
உயரிய பணிவாய் சொலலே!
உண்மை யொளித்த உலகே!
உயிரைக் குடித்த குழலே!


உதிர்த்த நாய்கள் வெறியே
உதிரம் உதிர்க்குங் குறியே!
உன்னிட மருந்தித் தானே
உருத்தது பாலும் சிவப்பாய்!


என்னைத் துளைத்துத் தானே
என்கீழ் மண்ணும் சிவப்பாய்!
வெண்ணிற உப்பளம் நனைந்து
செந்நிறச் செம்மண் நிலமாய்!


வந்தோர் போனோர் சுடார்
வதைத்த அரக்கர் எமார்
உயிரில் கலந்த உறவே!
உயிரை எடுத்த ததுவே!


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...