தமிழ்ப் போர்வையில் திரியும் பிரிவினைவாதிகள்!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் உதயமானது என்று சொல்லப்பட்டாலும் கூட, அதனையும் உறுதியாய் சொல்ல முடியாத அளவிற்கு தொன்மையும் வன்மையும் மிகுந்தது, நம் தாய்மொழியான தமிழ்ச்செம்மொழி. ‘அறிவியல் உலகம்’ என்று இன்றைய உலகைச் சொன்னால் கூட, அது மூடத்தனம் என்றே குட்டு வைத்து விடுகின்றன, நம் முன்னோரின் விஞ்ஞானம் புகுந்துள்ள தமிழ் நூல்களும் தமிழரின் பழங்கால கட்டிடங்களும் ஆலயங்களும். அத்தகையதோர் தமிழ் மொழியை, நம் செம்மொழியை இன்று புல்லுருவிகள் போல, தமிழ் தமிழ் என்று பொய்க் கூப்பாடு போடும் சில அரசியல் கட்சிகளும், நேற்றைய மழையில் முளைத்த இன்றைய சில காளான்களும் தம் வயிற்றை நிரப்ப, தமிழின் அடையாளங்களைச் சிதைக்கும் வண்ணம் செயல்படுகின்றன. அதனைக் கண்டிக்கும் வகையிலும், உண்மையை உரைப்பதற்காகவுமே இந்தக் கட்டுரை.
தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டுமாம்! ஆமாம்! இதில் யாருக்குத்தான் மாற்றுக் கருத்து இருக்கப் போகிறது, இந்தத் தமிழ்நாட்டில்? ஆனால், அந்தத் தமிழர் யார்? என்ற ஒரு கேள்வி வருவதற்கான சூழ்நிலையினை தாங்களே உருவாக்கி, அதற்குத் தாங்களாகவே ஒரு விளக்கம் தருகின்றனர். தாம் தான் கடவுள் போலவும், தமிழர் உருவான போதே பிறந்து விட்ட மூதாதையர் போலவும், கையில் ஒரு சாதிப் பட்டியலைத் தாமாகத் தயாரித்து, இந்த சாதியினர் தமிழர், இந்த சாதியினர் தெலுங்கர், இவர் கன்னடர், இவர் மலையாளி என்றே பறை சாற்றி, தம் வயிற்றைக் கழுவ தண்ணீர் தேடித் திரிகின்றனர், இந்த பசுத்தோல் போர்த்திய புலிகள்.
சாதியினை அடிப்படையாகக் கொண்டு, தம்மைத் தமிழர் என்றே, தாம் தான் கூவும் குயிலென்றே நினைத்துக் கொண்டு கரையும் காக்கைகளுக்கு, ‘சாதி’ என்ற வார்த்தையே தமிழ் இல்லை என்ற சேதி தெரியாமல் போய்விட்டதே! பாவம்! இதில் ஒரு நபர், இளைஞர். அவர் பெயர் பாரி சாலன். ஒரு ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழர் யார்? என்பதனை அறிய நிச்சயமாய் சாதி என்ற ஒன்று இருக்க வேண்டுமாம். ஒருவர் எந்த சாதி என்பதனை வைத்துத் தான் வைத்துத் தான் அவர் தமிழரா? என்பதனையே முடிவு செய்ய முடியுமாம்! எப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு இளைஞன் அவன்! இளைஞர்களின் முற்போக்கான சிந்தனைகளின் மத்தியில், ஒரு அவமானச் சின்னம் என்றே எனக்குத் தோன்றுகிறது!
தமிழ்நாட்டில் வசிக்கும், தெலுங்கர்கள் ஆந்திராவில் இருந்தும், கன்னடர்கள் கர்நாடகாவிலிருந்தும் இது போலே இன்னமும் சில வரலாறுகளை அவராய் உருவாக்கி, மிகைப் படுத்திப் பேட்டியளித்திருந்தார், அந்த மூடர். 1956-ல் இருந்து தான், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா. ஏன் இந்தியா முழுமைக்கும் 1956-ல் தான் மாநிலங்களே பிரிக்கப் பட்டன. அதற்கு முன் திராவிட நாடு, நம் நாடு என்ற தெரியாமல் போனது இந்த முட்டாள்களுக்கு! அத்தனை ஆதி கால வரலாறு பேசும் அவர்களுக்கு, இவ்வரலாறு தெரியாமல் போய் விட்டதா என்ன?
தமிழர், திராவிடர் என்ற இரு சொற்களும் தமிழரையே குறிக்கும் என்று அன்றே கூறிச் சென்றுள்ளார், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று குரல் கொடுத்த அறிஞர் திரு. இராபர்ட் கால்டுவெல் அவர்கள். மேலும், ஒரு மொழி செம்மொழி என்ற தகுதி பெறுவதற்கு அம்மொழி, தன் கிளைமொழிகளுக்குத் தாயாக விளங்க வேண்டும். இந்த விதி தமிழ்மொழிக்கு கச்சிதமாய் பொருந்தி உள்ளதாக, நமது மூதாதைக் கவிஞர்களும் மொழியியல் வல்லுநர்களும் தெரிவித்து உள்ளனர். அதாவது, தமிழ் மூலமொழி அல்லது தாய்மொழி எனவும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தமிழின் வழிமொழிகள் அல்லது கிளை மொழிகள் எனவும் விளக்கப் பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு தமிழ், உயர்தனிச் செம்மொழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது உண்மை தானே!
ஆக, அங்ஙனம் நோக்கின், இன்றைய தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ், சில இடங்களுக்கு ஏற்ப சிறு மாறுதல்களோடு நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் என்ற வழங்கப் பெறுவது போலத்தான், பழைய திராவிட நாட்டில் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் இருந்திருக்கும். ஓய்வற்ற காலச்சக்கரத்தின் சுழற்சியினால், பெரும் மாற்றங்கள் கண்டு இன்று அவை பெரும் வித்தியாசப் பட்டிருக்கலாம். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்தான், இங்கு அவற்றிற்கும், தமிழுக்கும் சம்மந்தம் இல்லாதது போலான மாயையகள் உருவாகியுள்ளன; அல்லது உருவாக்கப் பட்டுள்ளன. ஆக, அவ்வாறு சிந்திக்கையில், நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ் போலவே அவையும் தெலுங்குத் தமிழ், மலையாளத் தமிழ், கன்னடத் தமிழ் என்றே அன்று இருந்திருக்க முடியும். இது குறையா? இது தமிழின் தொன்மைக்குப் பெருமை!
மேலும், பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவாணர் போன்ற மொழிப்போர் வல்லவர்களும், தமிழ்ச்செம்மொழித் தன்மைக்கு மேற்கண்ட தாய்மொழி, கிளைமொழி என்ற விதியினை ஆராய்ந்து உரைத்த கூற்றுகளையும் நாம் உற்று நோக்க வேண்டும்.
இத்தகைய மாபெரும் சரித்திரங்களைச் சுமந்த, வரலாற்றுச் சாதனைமிக்கத் தமிழ்ச் செம்மொழியை, தம் சுய லாபத்திற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, முட்டாள் தனமான கருத்துகளைத் தெரிவித்து, செம்மொழித் தகுதியினை அவமானப் படுத்தும் செயலைச் செய்வதுடன், அடுத்த தலைமுறைக்கும் தவறான தகவல்களைக் கொண்டுசேர்த்து, அதனோடு நில்லாது, சாதிச் சாயலும் பூசி, ஒன்றாய், நண்பர்களாய், உறவினர்களாய் வசிக்கும் திராவிடர்களுக்குள்ளே, தமிழருக்குள்ளே அடங்கியுள்ள இவர்களைப் பற்றிய உண்மைகளைத் திரித்து, பகைமையை வளர்த்து, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் சிந்தும் குருதியில் குளித்திட முனைகின்றனர்.
மேலும், பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாக, அந்த பாரி சாலன் என்ற வடிகட்டிய முட்டாள், தமிழர் என்ற போர்வையில், நம் பாரத விடுதலைப் போராட்ட வீரரான, மன்னர் வீர பாண்டிய கட்டபொம்மனைக் கூட தவறாய் சித்தரித்து, மொழி வேற்றுமையைத் தாண்டி, கொச்சைப் படுத்தி ஒரு பேட்டியளித்துள்ளார்(ன்). வேறு எந்தெந்த பேட்டிகளில் அல்லது மேடைகளில் எத்தனை தியாகிகளையும் வீரர்களையும் அவமானப் படுத்திப் பேசியிருப்பானோ? தெரியவில்லை!
உணர்ச்சி பொங்கப் பேசும், திரு.சீமானுடைய பேச்சுக்களைக் கேட்க கடைவரிசை இடமாவது கிடைக்குமா என்பது போல் ஆவல் கொண்டிருந்த என்னை, அவருடைய இதே கொள்கையும், அரசியல் சுயலாபிகளாய்ப் போய் விட்டதனைப் போன்ற காரணத்தினாலும், மொழி வேற்றுமை புகுத்தும் காரணத்தினாலும், அதனையும் தாண்டி பகைமை வளர்க்கும் தொனியில் இருப்பதானால், அதுவும் உண்மையினைத் திரித்துச் செயல்படுவதனால், அவரை வெறுத்த என் போன்ற தமிழ்க் கவிஞர்களும், இளைஞர்களும் ஏராளம்.
அடேய்! முட்டாள் மூடர்களே! என் தமிழ்த்தாயினையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் இவ்வாறு தவறாய் அரங்கேற்றுவதற்கும், தம் தாய் தந்தையையே தவறாய் அரங்கேற்றுவதற்கும் வித்தியாசமே இல்லையடா!. திருந்துங்களேனடா! நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதனை உணருங்களேனடா!
- கவிஞர் சரவணபெருமாள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் உதயமானது என்று சொல்லப்பட்டாலும் கூட, அதனையும் உறுதியாய் சொல்ல முடியாத அளவிற்கு தொன்மையும் வன்மையும் மிகுந்தது, நம் தாய்மொழியான தமிழ்ச்செம்மொழி. ‘அறிவியல் உலகம்’ என்று இன்றைய உலகைச் சொன்னால் கூட, அது மூடத்தனம் என்றே குட்டு வைத்து விடுகின்றன, நம் முன்னோரின் விஞ்ஞானம் புகுந்துள்ள தமிழ் நூல்களும் தமிழரின் பழங்கால கட்டிடங்களும் ஆலயங்களும். அத்தகையதோர் தமிழ் மொழியை, நம் செம்மொழியை இன்று புல்லுருவிகள் போல, தமிழ் தமிழ் என்று பொய்க் கூப்பாடு போடும் சில அரசியல் கட்சிகளும், நேற்றைய மழையில் முளைத்த இன்றைய சில காளான்களும் தம் வயிற்றை நிரப்ப, தமிழின் அடையாளங்களைச் சிதைக்கும் வண்ணம் செயல்படுகின்றன. அதனைக் கண்டிக்கும் வகையிலும், உண்மையை உரைப்பதற்காகவுமே இந்தக் கட்டுரை.
தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டுமாம்! ஆமாம்! இதில் யாருக்குத்தான் மாற்றுக் கருத்து இருக்கப் போகிறது, இந்தத் தமிழ்நாட்டில்? ஆனால், அந்தத் தமிழர் யார்? என்ற ஒரு கேள்வி வருவதற்கான சூழ்நிலையினை தாங்களே உருவாக்கி, அதற்குத் தாங்களாகவே ஒரு விளக்கம் தருகின்றனர். தாம் தான் கடவுள் போலவும், தமிழர் உருவான போதே பிறந்து விட்ட மூதாதையர் போலவும், கையில் ஒரு சாதிப் பட்டியலைத் தாமாகத் தயாரித்து, இந்த சாதியினர் தமிழர், இந்த சாதியினர் தெலுங்கர், இவர் கன்னடர், இவர் மலையாளி என்றே பறை சாற்றி, தம் வயிற்றைக் கழுவ தண்ணீர் தேடித் திரிகின்றனர், இந்த பசுத்தோல் போர்த்திய புலிகள்.
சாதியினை அடிப்படையாகக் கொண்டு, தம்மைத் தமிழர் என்றே, தாம் தான் கூவும் குயிலென்றே நினைத்துக் கொண்டு கரையும் காக்கைகளுக்கு, ‘சாதி’ என்ற வார்த்தையே தமிழ் இல்லை என்ற சேதி தெரியாமல் போய்விட்டதே! பாவம்! இதில் ஒரு நபர், இளைஞர். அவர் பெயர் பாரி சாலன். ஒரு ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழர் யார்? என்பதனை அறிய நிச்சயமாய் சாதி என்ற ஒன்று இருக்க வேண்டுமாம். ஒருவர் எந்த சாதி என்பதனை வைத்துத் தான் வைத்துத் தான் அவர் தமிழரா? என்பதனையே முடிவு செய்ய முடியுமாம்! எப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு இளைஞன் அவன்! இளைஞர்களின் முற்போக்கான சிந்தனைகளின் மத்தியில், ஒரு அவமானச் சின்னம் என்றே எனக்குத் தோன்றுகிறது!
தமிழ்நாட்டில் வசிக்கும், தெலுங்கர்கள் ஆந்திராவில் இருந்தும், கன்னடர்கள் கர்நாடகாவிலிருந்தும் இது போலே இன்னமும் சில வரலாறுகளை அவராய் உருவாக்கி, மிகைப் படுத்திப் பேட்டியளித்திருந்தார், அந்த மூடர். 1956-ல் இருந்து தான், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா. ஏன் இந்தியா முழுமைக்கும் 1956-ல் தான் மாநிலங்களே பிரிக்கப் பட்டன. அதற்கு முன் திராவிட நாடு, நம் நாடு என்ற தெரியாமல் போனது இந்த முட்டாள்களுக்கு! அத்தனை ஆதி கால வரலாறு பேசும் அவர்களுக்கு, இவ்வரலாறு தெரியாமல் போய் விட்டதா என்ன?
தமிழர், திராவிடர் என்ற இரு சொற்களும் தமிழரையே குறிக்கும் என்று அன்றே கூறிச் சென்றுள்ளார், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று குரல் கொடுத்த அறிஞர் திரு. இராபர்ட் கால்டுவெல் அவர்கள். மேலும், ஒரு மொழி செம்மொழி என்ற தகுதி பெறுவதற்கு அம்மொழி, தன் கிளைமொழிகளுக்குத் தாயாக விளங்க வேண்டும். இந்த விதி தமிழ்மொழிக்கு கச்சிதமாய் பொருந்தி உள்ளதாக, நமது மூதாதைக் கவிஞர்களும் மொழியியல் வல்லுநர்களும் தெரிவித்து உள்ளனர். அதாவது, தமிழ் மூலமொழி அல்லது தாய்மொழி எனவும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தமிழின் வழிமொழிகள் அல்லது கிளை மொழிகள் எனவும் விளக்கப் பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு தமிழ், உயர்தனிச் செம்மொழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது உண்மை தானே!
ஆக, அங்ஙனம் நோக்கின், இன்றைய தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ், சில இடங்களுக்கு ஏற்ப சிறு மாறுதல்களோடு நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் என்ற வழங்கப் பெறுவது போலத்தான், பழைய திராவிட நாட்டில் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் இருந்திருக்கும். ஓய்வற்ற காலச்சக்கரத்தின் சுழற்சியினால், பெரும் மாற்றங்கள் கண்டு இன்று அவை பெரும் வித்தியாசப் பட்டிருக்கலாம். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்தான், இங்கு அவற்றிற்கும், தமிழுக்கும் சம்மந்தம் இல்லாதது போலான மாயையகள் உருவாகியுள்ளன; அல்லது உருவாக்கப் பட்டுள்ளன. ஆக, அவ்வாறு சிந்திக்கையில், நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ் போலவே அவையும் தெலுங்குத் தமிழ், மலையாளத் தமிழ், கன்னடத் தமிழ் என்றே அன்று இருந்திருக்க முடியும். இது குறையா? இது தமிழின் தொன்மைக்குப் பெருமை!
மேலும், பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவாணர் போன்ற மொழிப்போர் வல்லவர்களும், தமிழ்ச்செம்மொழித் தன்மைக்கு மேற்கண்ட தாய்மொழி, கிளைமொழி என்ற விதியினை ஆராய்ந்து உரைத்த கூற்றுகளையும் நாம் உற்று நோக்க வேண்டும்.
இத்தகைய மாபெரும் சரித்திரங்களைச் சுமந்த, வரலாற்றுச் சாதனைமிக்கத் தமிழ்ச் செம்மொழியை, தம் சுய லாபத்திற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, முட்டாள் தனமான கருத்துகளைத் தெரிவித்து, செம்மொழித் தகுதியினை அவமானப் படுத்தும் செயலைச் செய்வதுடன், அடுத்த தலைமுறைக்கும் தவறான தகவல்களைக் கொண்டுசேர்த்து, அதனோடு நில்லாது, சாதிச் சாயலும் பூசி, ஒன்றாய், நண்பர்களாய், உறவினர்களாய் வசிக்கும் திராவிடர்களுக்குள்ளே, தமிழருக்குள்ளே அடங்கியுள்ள இவர்களைப் பற்றிய உண்மைகளைத் திரித்து, பகைமையை வளர்த்து, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் சிந்தும் குருதியில் குளித்திட முனைகின்றனர்.
மேலும், பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாக, அந்த பாரி சாலன் என்ற வடிகட்டிய முட்டாள், தமிழர் என்ற போர்வையில், நம் பாரத விடுதலைப் போராட்ட வீரரான, மன்னர் வீர பாண்டிய கட்டபொம்மனைக் கூட தவறாய் சித்தரித்து, மொழி வேற்றுமையைத் தாண்டி, கொச்சைப் படுத்தி ஒரு பேட்டியளித்துள்ளார்(ன்). வேறு எந்தெந்த பேட்டிகளில் அல்லது மேடைகளில் எத்தனை தியாகிகளையும் வீரர்களையும் அவமானப் படுத்திப் பேசியிருப்பானோ? தெரியவில்லை!
உணர்ச்சி பொங்கப் பேசும், திரு.சீமானுடைய பேச்சுக்களைக் கேட்க கடைவரிசை இடமாவது கிடைக்குமா என்பது போல் ஆவல் கொண்டிருந்த என்னை, அவருடைய இதே கொள்கையும், அரசியல் சுயலாபிகளாய்ப் போய் விட்டதனைப் போன்ற காரணத்தினாலும், மொழி வேற்றுமை புகுத்தும் காரணத்தினாலும், அதனையும் தாண்டி பகைமை வளர்க்கும் தொனியில் இருப்பதானால், அதுவும் உண்மையினைத் திரித்துச் செயல்படுவதனால், அவரை வெறுத்த என் போன்ற தமிழ்க் கவிஞர்களும், இளைஞர்களும் ஏராளம்.
அடேய்! முட்டாள் மூடர்களே! என் தமிழ்த்தாயினையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் இவ்வாறு தவறாய் அரங்கேற்றுவதற்கும், தம் தாய் தந்தையையே தவறாய் அரங்கேற்றுவதற்கும் வித்தியாசமே இல்லையடா!. திருந்துங்களேனடா! நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதனை உணருங்களேனடா!
- கவிஞர் சரவணபெருமாள்
No comments:
Post a Comment