Tuesday, September 11, 2018

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்



நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே!
நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே!
நாற்றுநட தாயவளும் போகையிலே
நானும்போக அழுததெல்லாம் கண்ணுக்குள்ளே!
சேற்றுக்குள்ளே நானிறங்கிப் போகையிலே
தவளையிடம் தாவக்கற்றேன் விரைவினிலே!





கிணற்றருகே எட்டிச்சென்று பார்க்கையிலே
என்முதுகு புண்ணானது தாயினாலே!

சாலையிலே நான்நடந்து போகையிலே 
இருபுறமும் குடைபிடிக்கும் மரங்கள்தானே!
இன்றெல்லாம் பறவையெல்லாம் புத்தகத்தில்!
நான்பார்த்தேன் நேரினிலே கானகத்தில்!
நீச்சலுக்குப் பயிற்சிப்பள்ளி போனதில்லை!
நீந்தக்கற்றேன் மாமாவால் கண்மாயிலே!
தவில்காரர் வாசிக்க அருகேசென்று
அதுவெனக்கு வேண்டுமென்று அழுதேன்நானே!


என்முத்தம் வாங்கினார்கள் நிறையபெண்கள்!
இன்றதனைத் திரும்பக்கேட்டால் என்னவாகும்?
உறவுகளும் நட்புகளும் கூடிவாழ்ந்த
அந்தக்கால நினைவுகளும் சுகமே!சுகமே!


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...