என் விழியில் உன் பார்வை
மயக்குவாள் இன்றி திரிந்த விழிக்கு
உடைவாள் ஆனது உன் விழியே!
என்னைப் பார்த்ததோ?
இல்லை எதார்த்தமோ?
மண்ணைக் கவ்வியது என் விழிகள்!
மயக்குவாள் இன்றி திரிந்த விழிக்கு
உடைவாள் ஆனது உன் விழியே!
என்னைப் பார்த்ததோ?
இல்லை எதார்த்தமோ?
மண்ணைக் கவ்வியது என் விழிகள்!
தானியங்கு சேமிப்பகமாய்
என் மூளையில்
தவறுதலாய்ப் பதிவான காட்சி
உன் பார்வை!
தொலைக்காட்சியின்
முக்கியச்செய்தி போல்
தொடர்ந்து
என் நினைவில் ஒளிபரப்பாகிறது!
மறுபடி அந்தக் காட்சிக்காய் ஏங்குவேன்!
அதுபுரியும் ஆட்சியில் தான் வாழுவேன்!
வறட்சியில் குளத்தினில்
பாய்ந்திட்ட மழைவெள்ளமே!
மிரட்சியில் உடைந்திட்ட கரை
என் உள்ளமே!
இலக்கற்ற தென்றலாய்
பாய்ந்தேன் நானடி!
இலக்கினி நீயடி!
படர்வேன் கண்மணி!
உரசலாய் கொஞ்சம்!
மெர்சலாய் கொஞ்சம்!
சிரிசினில் ஊதி;
மூச்சினில் பாதி!
நான் இருப்பேன்!
விழிசெய்யும் நிகழ்ச்சியே
காதலின் புரட்சியே!
விரைந்துனை அடைவதே
இதயத்தின் குளிர்ச்சியே!
இதற்குமேல் எதற்கு,
உதாரணம் நமக்கு?
இணைந்தினி வாழ்வோம்;
இதயமே வாயடி!
- சரவணபெருமாள்
என் மூளையில்
தவறுதலாய்ப் பதிவான காட்சி
உன் பார்வை!
தொலைக்காட்சியின்
முக்கியச்செய்தி போல்
தொடர்ந்து
என் நினைவில் ஒளிபரப்பாகிறது!
மறுபடி அந்தக் காட்சிக்காய் ஏங்குவேன்!
அதுபுரியும் ஆட்சியில் தான் வாழுவேன்!
வறட்சியில் குளத்தினில்
பாய்ந்திட்ட மழைவெள்ளமே!
மிரட்சியில் உடைந்திட்ட கரை
என் உள்ளமே!
இலக்கற்ற தென்றலாய்
பாய்ந்தேன் நானடி!
இலக்கினி நீயடி!
படர்வேன் கண்மணி!
உரசலாய் கொஞ்சம்!
மெர்சலாய் கொஞ்சம்!
சிரிசினில் ஊதி;
மூச்சினில் பாதி!
நான் இருப்பேன்!
விழிசெய்யும் நிகழ்ச்சியே
காதலின் புரட்சியே!
விரைந்துனை அடைவதே
இதயத்தின் குளிர்ச்சியே!
இதற்குமேல் எதற்கு,
உதாரணம் நமக்கு?
இணைந்தினி வாழ்வோம்;
இதயமே வாயடி!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment