Tuesday, September 11, 2018

கல்லறை வாசலிலும் காத்திருப்பேன்!

கல்லறை வாசலிலும் காத்திருப்பேன்!


கண்ணுக்குத் தெரியாத
தென்றலின் சேட்டையால்
கண்ணில் தெரிந்த
தென்றல் கூந்தல்!
ஒற்றைக் கோட்டில்
ஆடவன் தடுமாறினால்
ஒய்யாரமாய் நெளியும்
புருவத்தின் சேட்டையாம்!


சிலையென நின்று
நிலையினை மறந்தால்
ஏழாம் அறிவு
விழிகளின் மந்திரம்!
தங்கச் சில்லறையின்
சிதறல் ஒலி
தவிடு பொடியானால்
உனது சிரிப்பொலி!


உன் புன்னகை
சிந்தும் வழியில்
வரிசையாய் நிற்கிறது
வாலிபர் கூட்டம்
ஏறெடுத்துப் பாராத
எட்டாக்கனி முகம்
எனையேனோ பார்த்து
எடுத்துக்கொள் என்றது


நிலவின் விடுமுறையில்
நிறைந்த ஒளிப்பேழை
நிலத்தில் விழுந்தாற்போல்
இதயத்தில் நீ!
உலகைச் சுருட்டி
ஒட்டுமொத்த மகிழ்வும்
உன்னால் வந்தது!
எனக்கு என்னானது?


மனம்போன ஒத்தையடியில்
கைகோர்க்க வந்தவளே!
இனியென்ன தயக்கம்?
பெற்றோரின் விருப்பம்!
வரவெனில் கல்யாணப்
பந்தலில் காத்திருப்பேன்!
பிரிவெனில் கல்லறை
வாசலில் காத்திருப்பேன்!


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...