Tuesday, September 11, 2018

காதல் வந்தால் சொல்லி அனுப்பு!

காதல் வந்தால் சொல்லி அனுப்பு!




என்னவளே! எனக்கானவளே!
ஏதோவொரு மூலையில்
எனக்காய் பிறந்தவளே! - நீ
எங்கே இருக்கிறாய்?


முகமும் பார்த்தது இல்லை!
முழியில் விழுந்ததும் இல்லை! - ஆயினும்
முழுமதியெனவே ஒளி வீசுகிறது,
அன்பே! திருமண ஞாபகம்!

எப்படி இருப்பாளோ? எவளாய் இருப்பாளோ?

மல்லிகா என்று பெயர் வைத்தாலும்
மங்கையவள் மணப்பது இல்லை!
மண் என்றே பெயர் வைத்தாலும்
மல்லியின் நறுமணம் மாறுவது இல்லை!
மல்லியின் மணமடி, என் மனம்!
உன்முகம் பாராமலே,
உன்மேல் ஆசை வைத்தேனடி,
என் வருங்கால ராஜகுமாரி!


எங்கிருக்கிறாய்?
என் அருகிலா? தொலைவிலா?
நீயாவது என்னைக் கண்டால்,
காதல் வந்தால், சொல்லி அனுப்பு! - இன்னொரு
கம்பன் உருவாகட்டும் நம் காதலால்!


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...