Monday, February 26, 2018

அன்புள்ள மான் விழியே

அன்புள்ள மான் விழியே


அன்புள்ள மான் விழியே - ஒரு
ஆசைமொழி பேசு கிளியே
இமைவிட்டு தாவும் பார்வையே - என்மேல்
குதித்தால் காதல் போர்வையே


அழகென்று முழி நோக்க - அதில்
வேலின்றி வினை உள்ளதே
மான்விழியென சொன்னது தவறு
மான்கொம்பென நெஞ்சில் சொருகுதே


பட்டாம் பூச்சி என - உன்
இமை ரெண்டும் பறக்கிறதோ
பலமுறை அசைந்தும் நகரவில்லை
பறப்பதெல்லாம் மாமன் மனமே


கண் அடித்தாய் சத்தமில்லை - நான்
வலி உணர்ந்தேன் காயமில்லை
காளை எனக்கு எதிர்ப்புமில்லை - ஆனால்
உன்னெதிர் நிற்க துணிவுமில்லை


நோவு தந்த நஞ்செதுவும்
மருந்தென ஆனதுண்டா - உன்
முழிதந்த மூச்சுத்திணறல் போக
முழுத்தீர்வு நீயடி மான்விழியே


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...