Sunday, February 25, 2018

அரசியல் தலைவருக்கு சமூகத்தொண்டன் எழுதும் மடல்

அரசியல் தலைவருக்கு சமூகத்தொண்டன் எழுதும் மடல்



வெண்மேகம் விழுந்ததுவோ வெள்ளாடைக் கூட்டம்
வெண்பனிதான் தெருவருதோ குளிர்விக்கும் பேச்சும்
பண்ணோடும் காற்றினிலே கட்சிக்கொடி ஆட்டம்
பண்பாடும் பிறழ்ந்ததுவோ இளங்காலில் கையும்

தெருத்தெருவாய் சுற்றிவந்து மயக்கினாயே தலைவனே
கருப்பொருளாய் விவசாயம் பேசினாயே விழுந்தனே
வாக்குதந்து வாக்குகேட்டு வழிந்தாயே இழிந்தனே
நாக்குநம்பி காதலாகி வாக்களித்து வந்தனே

வெற்றிச்செய்தி வெளிவரவே வெளிவரவில்லை நீயுமே
வெற்றுவாக்கை நம்பிநம்பி நடுத்தெருவில் நின்றனே
நதியெல்லாம் இணைத்திடுவேன் இறுமாப்பாய் சொன்னயே
நதியின்றி நாதியின்றி விவசாயம் செத்ததே

தமிழ்ப்பெருமை பீற்றியே வாக்குகேட்டு வந்தயே
வங்கியெல்லாம் தமிழழிக்கும் சாதனை புரிந்தயே
ஈழமது மீட்டிடவே வாக்களிப்பீர் என்றயே
ஈகையனாய் ஆயுதங்கள் ஈழமழிக்க தந்தயே

பேருந்தின்று ஆனதே பணக்கார ஊர்தியே 
ஓகியது போகியென மீனவக்குடி எரித்ததே
வேலையில்லை சாலையில்லை சோறுமில்லை நீருமில்லை
இருப்பதெல்லாம் இல்லாமையே பழிதீர்க்க வரும்தேர்தலே

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...