Sunday, February 25, 2018

எங்கும் தமிழென முழங்குவோம்

எங்கும் தமிழென முழங்குவோம்

ஆதியிலே முளைத்த மொழி
ஆதியாய் முளைத்த மொழி
ஆங்கிலத்தில் மோகம் வர
பாங்கினிலே மாறுவாயோ

கால்கடுக்க நின்றிருந்து
காவுவாங்கும் முயற்சியடா
ஆங்கில வழிக்கல்வி
குரல் இனிதே குழந்தையடா
மம்மி எனில் கசக்குதடா
ஆங்கில வழிக்கல்வியடா

எந்தமொழி எந்தவழி
எந்நாட்டில் வந்தாலும்
எங்கும் தமிழென முழங்குவோம்

வெள்ளம் வர கரையாத்தமிழ் - நில
நடுக்கம் வர புதையாத்தமிழ்
தீப்பிடித்தும் எரியாத்தமிழ்
காற்றடித்தும் பறவாத்தமிழ்

இன்று - நீ
வங்கியிலே அழித்தாலும்
இந்தியையே திணித்தாலும்
வீழ்ந்திடுமோ எம்தமிழ்

ஊமைவாயில் அம்மாவை அழிப்பாயோ
ஆடுமாட்டில் அம்மாச்சத்தம் அறுப்பாயோ

அழிக்கும் இடமெல்லாம்
பொறிப்போமே பொன்தமிழை
கடலே மறித்தாலும்
தாண்டித்தமிழ் வளர்ப்போமே

எங்கும் தமிழ் வளர்ப்போமே
எங்கும் தமிழென முழங்குவோமே

( நான்காம் கவியரங்கம்)
- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...