சிந்தையில் ஓர் புரட்சி
உருவின்றி உருவாக்கும் சிந்தையே விந்தையே
உணர்வின்றி புரட்சியே புகுத்தியே வென்றையே
ஆதியிலே நாதியிலை சோறுதேடி அலைந்ததே
சிந்தையதே முளைத்தையே ஓரிடத்தில் விளைத்ததே
உணர்வின்றி புரட்சியே புகுத்தியே வென்றையே
ஆதியிலே நாதியிலை சோறுதேடி அலைந்ததே
சிந்தையதே முளைத்தையே ஓரிடத்தில் விளைத்ததே
நள்ளிரவைப் பகலாக்கும் மின்விளக்கு கொடுத்தையே
கண்கையிற் சிக்காதே காற்றில்மின் எடுத்தையே
ஓலையிலே ஓட்டையிட்ட பழம்பெருமை தமிழதே
கணிப்பொறியின் முகத்திரையில் வண்ணத்தமிழ் மிளிருதே
கண்கையிற் சிக்காதே காற்றில்மின் எடுத்தையே
ஓலையிலே ஓட்டையிட்ட பழம்பெருமை தமிழதே
கணிப்பொறியின் முகத்திரையில் வண்ணத்தமிழ் மிளிருதே
மூலையிலே வேலையென வெளிநாடு போனவன்
முகம்வருதே கைக்குள்ளே கைபேசி திரையிலே
தூதுசொல தந்தியஞ்சல் சிந்தையே பழையதே
நொடிக்கொரு குறுந்தூது கொடுத்தையே புதியதே
முகம்வருதே கைக்குள்ளே கைபேசி திரையிலே
தூதுசொல தந்தியஞ்சல் சிந்தையே பழையதே
நொடிக்கொரு குறுந்தூது கொடுத்தையே புதியதே
ஏமாற்றும் நிலாச்சோறு தாயன்பும் சிந்தையே
விண்ணேறி நிலவிறங்கும் புரட்சியதும் சிந்தையே
சிறகின்றி பறக்கவே துடித்ததே மனிதமே
சிறகோடு வானூர்தி வடித்தையே பறக்கவே
விண்ணேறி நிலவிறங்கும் புரட்சியதும் சிந்தையே
சிறகின்றி பறக்கவே துடித்ததே மனிதமே
சிறகோடு வானூர்தி வடித்தையே பறக்கவே
சிந்தையதை வெளிச்சொல பகல்கனவு என்பரே
சந்தையில அவர்இடம் நம்சிந்தை கூவிட
மந்தையென மானுடம் திரியவே சிந்தையெழு
முந்தையன திரித்திடும் புரட்சியென புகுந்தெழு
சந்தையில அவர்இடம் நம்சிந்தை கூவிட
மந்தையென மானுடம் திரியவே சிந்தையெழு
முந்தையன திரித்திடும் புரட்சியென புகுந்தெழு
- சரவணபெருமாள்
("நதியோர நாணல்கள்" முகநூல் குழுமத்தின் "சிந்தனையில் ஓர் புரட்சி" தலைப்பில் நடந்த புதுக்கவி தாங்கிய புரட்சிகவி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது)
No comments:
Post a Comment