Sunday, February 25, 2018

குற்றார் – வீற்றேன்

குற்றார் – வீற்றேன் 


பெற்றவள் போக பெற்றவன் குடிக்க
கற்றதைத் தொடர பெற்றேன் செருப்பை
உற்றவன் பேசக் கற்றான் பேரம்
முற்றல் நாளே வற்றல் நானே

கற்றல் இலவச மெனினுஞ் செலவே
வீற்றேன் பலரச மெனது வாழ்வே
பெற்றார் சாகக்குடிய அரசுங் கடவுளும்
ஏற்றகூலி தாராவிழப்பு சமூகவரசுக் குற்றமே

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...