Sunday, February 25, 2018

தமிழ் சிதைந்தால், தமிழினம் சிதையும்

தமிழ் சிதைந்தால், தமிழினம் சிதையும்

வந்தமொழி சென்றமொழி எத்தனையோ நாட்டிலே
வந்ததேதி யாரறிவார் எந்தமிழை ஏட்டிலே
கல்வெட்டைத் தாண்டியது கணினிக்குள்ளும் நுழைந்தது
மரபுவழி வந்ததமிழன் வாய்க்குள்ளே பிறழ்ந்தது

மம்மியென்றே அழைக்கச்சொல்லி எத்தனைத்தாய் முறைக்கிறாள்
மம்மியென்றால் பிணம்பொருள் எத்தனைத்தாய் அறிகிறாள்
கொஞ்சும்போதும் கெஞ்சும்போதும் எந்தமிழே சிறந்தது
திட்டும்போதும் தமிழில்திட்டி னால்மட்டுஎம் மனசாறுது

பள்ளியிலே தமிழ்பேச பத்தாயிரம் தண்டனை
விதித்தவனை நாவறுத்து கொடுக்கவேண்டும் தண்டனை
இந்தியெதிர்த்து நாளிதழில் பேச்சுக்களை வீசியே
பேரப்பிள்ளை அத்தனையும் இந்திகற்க அனுப்புவார்

தமிழன் தமிழனென்றே கூட்டஞ் சேர்த்தால்
தமிழ் வளராதடா தமிழனே தமிழனே
தமிழே பிறழும் பள்ளிகளை மூடிப்போடு
தமிழ்வழியாய் பாடம்பயில பொறியைநீ கொளுத்திப்போடு

இமயம்முதல் குமரிவரை நீண்டதமிழ் இனமிது
தமிழ்சுருங்க இனஞ்சுருங்கி தென்னடியில் வீழ்ந்தது
இன்னுங்கூட முழிக்கவில்லை என்றுசொன்னால் தமிழனே
தென்கோடியும் கடலுக்குள்ளே மூழ்கிப்போகும் தமிழனே

(ஐந்தாம் கவியரங்கம்)
- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...