Friday, March 9, 2018

தமிழரின் பொற்காலம்

தமிழரின் பொற்காலம்
 
கற்கால காட்டுநரன் திறவவாய் ஆவெனுமுயிர்
பிற்கால ஊமைவாயும் திறந்திடவே அஃதுமுயிர்
எக்காலும் எவ்வுயிரும் வாய்திறவ ஆவெனவே
எம்மொழி செம்மொழி ஆகயவர்வாய் ஆவெனத்திறவும்

எழுத்துச் சீரடிதொடை அணியென யாப்பிட
எளியரறி புதுக்கவிபிற புரட்சிகளாய் வெடித்திட
கல்லோலை கவிவிருந்து கணினித்திரை தொட்டிட
கற்காலமோ பிற்காலமோ பொற்காலமென சொல்லிட

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...