கன்னங் கருப்பழகி வெள்ளச்சிரிப்பழகி - கிராமியக்கவிதை
கூத்துப் பாக்க வந்து நின்னவுக
அத்த மக ஒண்ணு வாச்சதுண்டா
மாமென் மக சேதி சொல்லப்போறேன்
மயங்கி நீங்க அங்க வந்திடவேண்டா
அத்த மக ஒண்ணு வாச்சதுண்டா
மாமென் மக சேதி சொல்லப்போறேன்
மயங்கி நீங்க அங்க வந்திடவேண்டா
அங்க அடையாள மச்சமும் தேடி
எங்கு இருக்குணு கண்டு புடி
ஆடி அம்மாவாச வருசத்துக் கொண்ணு
அவளக் கட்டிக்கிட்டா நித்தமும் ஒண்ணு
எங்கு இருக்குணு கண்டு புடி
ஆடி அம்மாவாச வருசத்துக் கொண்ணு
அவளக் கட்டிக்கிட்டா நித்தமும் ஒண்ணு
எந்த நெறத்துல பொறந்த மனுசனும்
நெஞ்சுக் குழியில இருட்டான வானம்
கருப்பு நெறத்துக்கு அவளே சொந்தம்
வெள்ள மனசுக்கு அவளே பந்தம்
நெஞ்சுக் குழியில இருட்டான வானம்
கருப்பு நெறத்துக்கு அவளே சொந்தம்
வெள்ள மனசுக்கு அவளே பந்தம்
கன்னந் தோண்டுன கருப்புக் குழியில
வேர்வச் சொட்டுவொண்ணு விழுந்து மின்னுது
அன்ன நடவொண்ணு போட்டு போகையில
வெள்ளிக் கொலுசுதான் துள்ளிக் குதிக்குது
வேர்வச் சொட்டுவொண்ணு விழுந்து மின்னுது
அன்ன நடவொண்ணு போட்டு போகையில
வெள்ளிக் கொலுசுதான் துள்ளிக் குதிக்குது
ராத்திரி நான் பாத்த நட்சத்திரம்
எங்க போயிருச்சு காலேல காணொம்
அத்த மகபாத்து கண்ணு அடிச்சேன்
சிரிச்சுப் புட்டா வாயில் நட்சத்திரம்
எங்க போயிருச்சு காலேல காணொம்
அத்த மகபாத்து கண்ணு அடிச்சேன்
சிரிச்சுப் புட்டா வாயில் நட்சத்திரம்
வெள்ளப் பல்லஅவ காட்டிக் காட்டி
உள்ளக் கதவயவ வெட்டிப் போட்டா
மெல்ல நெளிஞ்சு என்கிட்ட வந்து
கட்டி கிரியானு உசுப்பிப் புட்டா
உள்ளக் கதவயவ வெட்டிப் போட்டா
மெல்ல நெளிஞ்சு என்கிட்ட வந்து
கட்டி கிரியானு உசுப்பிப் புட்டா
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment