பொன்னு விளையுற பூமி இது - கிராமியக்கவிதை
பொன்னு விளையுற பூமியில - அம்மா
வெளஞ்ச மனுசங்க சரியா யில்ல
மொதலாளியா நாங்க இருந்தகாலம் போயி
ஓட்டாண்டியா இங்க ஆனோ மம்மா
வெளஞ்ச மனுசங்க சரியா யில்ல
மொதலாளியா நாங்க இருந்தகாலம் போயி
ஓட்டாண்டியா இங்க ஆனோ மம்மா
அஞ்சு மணியான கண்ணையும் மூடல
வயக்காடு கெளம்பிட்டேன் கஞ்சி குடிக்கல
நஞ்சையும் புஞ்சையும் எதையும் விடல
உழுது அலுத்தேனு எம்மாடு சொல்லல
வயக்காடு கெளம்பிட்டேன் கஞ்சி குடிக்கல
நஞ்சையும் புஞ்சையும் எதையும் விடல
உழுது அலுத்தேனு எம்மாடு சொல்லல
சேத்துக்குள்ள கால வெச்ச நேரத்துல
சோத்தயள்ளிப் போட மறந்து புட்டேன்
சேத்துப்புண்ணு கால தச்ச பின்னாடியும்
நாத்துநட நான் வந்து புட்டேன்
சோத்தயள்ளிப் போட மறந்து புட்டேன்
சேத்துப்புண்ணு கால தச்ச பின்னாடியும்
நாத்துநட நான் வந்து புட்டேன்
கோவணத்தக் கட்டி போட்ட அரிசிய
தின்னுக் கொளுத்தவென் கோட்டை யில
பஞ்சமாகிப் போச்சு மானியம் கொடுன்னு
டெல்லிக்குப் போனோம் கண்டுக் கல
தின்னுக் கொளுத்தவென் கோட்டை யில
பஞ்சமாகிப் போச்சு மானியம் கொடுன்னு
டெல்லிக்குப் போனோம் கண்டுக் கல
ஊருக்கெல்லாம் சோறு போட்டுப்புட்டு - நாங்க
வரிசேல நிக்கிறோம் அரிசி வாங்க
உசுரோட இருந்தப்போ ஒண்ணுங் குடுக்கல
தற்கொல பண்ணிட்டா நிவா ரணம்
வரிசேல நிக்கிறோம் அரிசி வாங்க
உசுரோட இருந்தப்போ ஒண்ணுங் குடுக்கல
தற்கொல பண்ணிட்டா நிவா ரணம்
ஆளுறவன் தான் ஒதுக்கிட்டானு பாத்தா
வானமும் மேகமும் சதி பண்ணுதே
வந்து போயி ரொம்ப நாளுமாச்சே
எங்க கண்மாயும் கெணறும் வத்திப்போச்சே
வானமும் மேகமும் சதி பண்ணுதே
வந்து போயி ரொம்ப நாளுமாச்சே
எங்க கண்மாயும் கெணறும் வத்திப்போச்சே
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment