Saturday, March 17, 2018

உன்னோடு நான்

உன்னோடு நான்
 
விழியின் விரிப்பில் விழுந்து விட்டேன்
விலையென்ன உனக்கு அறிய வந்தேன்
வழியே நீயென வலிய வந்தேன்
எனையே உனக்கென கொடுக்க வந்தேன்

சிரிக்கின்றாய்
கன்னம் குழிக்கின்றாய்
அந்தக் குழிக்குள்
என்னையே புதைக்கின்றாய்

சுளிக்கின்றாய்
உதடு குவிக்கின்றாய்
குவியலின் உச்சியில்
குளிர்க்கின்றாய்

மெல்லக் கண் திறக்கின்றாய்
மேகக்கூந்தல் பரப்பி அசைக்கின்றாய்
பாதக்கொலுசொலி இசைக்கின்றாய்
பல்லழகுச் சிரிப்பில்
கொலுசை வெல்கின்றாய்

முன்னே நடக்கின்றாய்
பின்னே தொடர்கின்றேன்
கடைக்கண் கழல்கின்றாய்
மரப்பின் ஒளிகின்றேன்
அங்கே உன்னால்
தேடலின் கலைச்சங்கமம்
தேடல் ஒரு காதல் தத்துவம்

தேடாதே
கண்மணியே வாடாதே
கழுத்தின் கீழே உற்றுப்பார்
துடிதுடிப்பும் படபடப்பும்
நானடி நங்கையே
நானே உன் இதயமடி

உயிரும் உடலும் கலந்திருப்பேன்
ஆயுள் முழுதும் சேர்ந்திருப்பேன்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...