உன்னோடு நான்
விழியின் விரிப்பில் விழுந்து விட்டேன்
விலையென்ன உனக்கு அறிய வந்தேன்
வழியே நீயென வலிய வந்தேன்
எனையே உனக்கென கொடுக்க வந்தேன்
விலையென்ன உனக்கு அறிய வந்தேன்
வழியே நீயென வலிய வந்தேன்
எனையே உனக்கென கொடுக்க வந்தேன்
சிரிக்கின்றாய்
கன்னம் குழிக்கின்றாய்
அந்தக் குழிக்குள்
என்னையே புதைக்கின்றாய்
கன்னம் குழிக்கின்றாய்
அந்தக் குழிக்குள்
என்னையே புதைக்கின்றாய்
சுளிக்கின்றாய்
உதடு குவிக்கின்றாய்
குவியலின் உச்சியில்
குளிர்க்கின்றாய்
உதடு குவிக்கின்றாய்
குவியலின் உச்சியில்
குளிர்க்கின்றாய்
மெல்லக் கண் திறக்கின்றாய்
மேகக்கூந்தல் பரப்பி அசைக்கின்றாய்
பாதக்கொலுசொலி இசைக்கின்றாய்
பல்லழகுச் சிரிப்பில்
கொலுசை வெல்கின்றாய்
மேகக்கூந்தல் பரப்பி அசைக்கின்றாய்
பாதக்கொலுசொலி இசைக்கின்றாய்
பல்லழகுச் சிரிப்பில்
கொலுசை வெல்கின்றாய்
முன்னே நடக்கின்றாய்
பின்னே தொடர்கின்றேன்
கடைக்கண் கழல்கின்றாய்
மரப்பின் ஒளிகின்றேன்
அங்கே உன்னால்
தேடலின் கலைச்சங்கமம்
தேடல் ஒரு காதல் தத்துவம்
பின்னே தொடர்கின்றேன்
கடைக்கண் கழல்கின்றாய்
மரப்பின் ஒளிகின்றேன்
அங்கே உன்னால்
தேடலின் கலைச்சங்கமம்
தேடல் ஒரு காதல் தத்துவம்
தேடாதே
கண்மணியே வாடாதே
கழுத்தின் கீழே உற்றுப்பார்
துடிதுடிப்பும் படபடப்பும்
நானடி நங்கையே
நானே உன் இதயமடி
கண்மணியே வாடாதே
கழுத்தின் கீழே உற்றுப்பார்
துடிதுடிப்பும் படபடப்பும்
நானடி நங்கையே
நானே உன் இதயமடி
உயிரும் உடலும் கலந்திருப்பேன்
ஆயுள் முழுதும் சேர்ந்திருப்பேன்
ஆயுள் முழுதும் சேர்ந்திருப்பேன்
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment