Saturday, March 17, 2018

மருத நிலத்து மரிக்கொழுந்தே

மருத நிலத்து மரிக்கொழுந்தே - கிராமியக்கவிதை

வரப்பு மேல மரிக்கொழுந்தே! - நீ
சூதானமா நடந்து போடி
வழுக்கிவிட்டு தழுவும் குணத்தில்
வரப்பு உன்மச்சான் சாதி

நாத்து நடும் வேளையில - நீ
ஏத்தி கட்டுன சேலையடி
முட்டி ஒரசி நாத்து வளரும்
உரமும் போடத் தேவையில்ல

குருவி வெரட்ட வந்த குயிலே! - நீ
கத்தாம கூவுறியே
நெல்லு பொறுக்க வந்த மயிலே - மயங்கி
தோக விரிச்சு நின்னதே

எட்டிப்புடுங்க சிரமமுன்னு - அந்த
வாழைக்குலை சாயுதடி
எப்போ என்ன தின்னப்போற - அந்த
மாந்தோப்பு காயெல்லாம் ஏங்குதடி

காலடியில் ஒட்டுன சகதி - உன்
வீடு வரைக்கும் கூட்டிப்போற
கண்ணடியில் கவுந்த மச்சான் - ஏன்டி
என்ன விட்டுட்டு போற

மருத நெலத்து மரிக்கொழுந்தே! - நீ
என்ன வெல நானுந்தாரேன்
மாட்டேன்னு ங்கொப்பென் சொன்னா - ஒன்ன
தூக்கிட்டு போயி தாலிகட்டுறேன்

பத்து மாசம் ஆகட்டுமடி
முத்து ஒண்ணு கண்ணு முழிக்கும்
சொத்து வந்து சேந்ததுன்னு
மொத்தச்சொந்தம் பகை மறக்கும்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...