Saturday, March 17, 2018

பூமியும் புலம்பலும்

பூமியும் புலம்பலும்

அடேய்! பாவிகளா! ஆருதந்த அதிகாரம்?
காடே காணவில்லை என்னவொரு துணிகரம்
மரத்தை யறுத்தீர் மழையைத் தொலைத்தீர்
மார்பது வற்ற ஆழ்துளை அமைத்தீர்

நெகிழிகள் புதைத்து நீர்த்தாகம் கொடுத்தீர்
மணலை அள்ளி ஆறுகள் கெடுத்தீர்
விளையும் பூமியில் வேதியியல் புகுத்தி
நெல்மணி பிறக்கும் கருப்பை அறுத்தீர்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...