பூமியும் புலம்பலும்
அடேய்! பாவிகளா! ஆருதந்த அதிகாரம்?
காடே காணவில்லை என்னவொரு துணிகரம்
மரத்தை யறுத்தீர் மழையைத் தொலைத்தீர்
மார்பது வற்ற ஆழ்துளை அமைத்தீர்
காடே காணவில்லை என்னவொரு துணிகரம்
மரத்தை யறுத்தீர் மழையைத் தொலைத்தீர்
மார்பது வற்ற ஆழ்துளை அமைத்தீர்
நெகிழிகள் புதைத்து நீர்த்தாகம் கொடுத்தீர்
மணலை அள்ளி ஆறுகள் கெடுத்தீர்
விளையும் பூமியில் வேதியியல் புகுத்தி
நெல்மணி பிறக்கும் கருப்பை அறுத்தீர்
மணலை அள்ளி ஆறுகள் கெடுத்தீர்
விளையும் பூமியில் வேதியியல் புகுத்தி
நெல்மணி பிறக்கும் கருப்பை அறுத்தீர்
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment