Sunday, March 25, 2018

நிலுவை வாழ்க்கை

நிலுவை வாழ்க்கை


சோறுபோட்ட உழவனுக்கு மானியம் நிலுவை
நித்தமோடி உழைத்தவனின் ஊதியம் நிலுவை
காசுயில்லா நோயாளிக்கு வைத்தியம் நிலுவை
காசுவுள்ள கொலையாளிக்கு தண்டனை நிலுவை

கல்விக்கட்டணம் கட்டும்வரை கற்றலும் நிலுவை
கையூட்டுக்கள் கொடுக்கும்வரை சான்றிதழ் நிலுவை
பட்டப்படிப்பு முடித்தபின்னே பணியும் நிலுவை
ஏழைகளின் வயிற்றுப்பசி நிலுவையிலும் நிலுவை

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...