இந்தப்புன்னகை என்ன விலை?
நான்தான் அது!
நான்தான் அது!
புன்னகை முன்னே சொல்லி நிற்க
இலவசமாய் இணைகிறது
இன்னும் பெரும் புன்னகை!
புதிதாய் பூத்தது புன்னகை!
புது மணப்பெண்ணே!
எங்கே ஒளித்தாய்?
இத்தனை நாளாய்!
என்ன விலையது தருவேன்
ஆயுளும் புன்னகை தருவாய்
புது மணப்பெண்ணே!
எங்கே ஒளித்தாய்?
இத்தனை நாளாய்!
என்ன விலையது தருவேன்
ஆயுளும் புன்னகை தருவாய்
முன்னால் பூத்த புன்னைகையால்
பின்னால் ஒளிகிறது,
மல்லி...!
புன்னகை விலையின் முன்னே
தன்னது விலை தவிடுபொடி
என்றே பயம்...!
என்னிடம் மட்டும் சொல் - இந்த
புன்னகை என்ன விலை?
பின்னால் ஒளிகிறது,
மல்லி...!
புன்னகை விலையின் முன்னே
தன்னது விலை தவிடுபொடி
என்றே பயம்...!
என்னிடம் மட்டும் சொல் - இந்த
புன்னகை என்ன விலை?
புன்னகையில் மின்னிய
பற்களின் தயவில்
பொன்நகை ஒளிர்கிறது!
முத்துப்பல் ஒன்று
தன்னில் வந்து சேருமா என்று
கேள்விகள் கேட்கிறது..!
எனக்கு
அதெல்லாம் தேவையில்லை - இந்த
புன்னகை என்ன விலை?
பற்களின் தயவில்
பொன்நகை ஒளிர்கிறது!
முத்துப்பல் ஒன்று
தன்னில் வந்து சேருமா என்று
கேள்விகள் கேட்கிறது..!
எனக்கு
அதெல்லாம் தேவையில்லை - இந்த
புன்னகை என்ன விலை?
வெட்கங்கள் தேங்கிய
முகத்தை தரையில் கவிழ்க்க,
வரிசையாய் நகர்ந்த எறும்புகள்
வட்டமாய் தேங்கி நின்றன;
புன்னகை சிந்திய
எச்சில் துளியில்..!
ஆம்..
அந்தப்புன்னகை
என்ன விலை?
முகத்தை தரையில் கவிழ்க்க,
வரிசையாய் நகர்ந்த எறும்புகள்
வட்டமாய் தேங்கி நின்றன;
புன்னகை சிந்திய
எச்சில் துளியில்..!
ஆம்..
அந்தப்புன்னகை
என்ன விலை?
உதட்டில் தாவும் முயற்சி
தொங்கும் தோடுகள் ஆட்டம்!
உம்மென்றுள்ள செவியைவிட
கலகலக்கும் புன்னகை இனிதாம்!
சொல்லிவிடு - அந்த
புன்னகை என்ன விலை?
தொங்கும் தோடுகள் ஆட்டம்!
உம்மென்றுள்ள செவியைவிட
கலகலக்கும் புன்னகை இனிதாம்!
சொல்லிவிடு - அந்த
புன்னகை என்ன விலை?
சன்னலின் ஓரம்
புன்னகையில் நீ...!
சன்னல் காற்று உதட்டில் மோத
தனியாய் வந்து நின்றாய் பெண்ணே!
ரகசியமாய் வந்து தழுவ,
அந்த
தென்றலிடம் சொன்ன
விலைதான் என்ன?
புன்னகையில் நீ...!
சன்னல் காற்று உதட்டில் மோத
தனியாய் வந்து நின்றாய் பெண்ணே!
ரகசியமாய் வந்து தழுவ,
அந்த
தென்றலிடம் சொன்ன
விலைதான் என்ன?
பெண்ணவள் கேட்டு
ஆணவன் வந்தேன்
தேவதை முன்னே
மன்மதன் வர
சிந்திய புன்னகை இது!
அதன் விலை எது?
ஆணவன் வந்தேன்
தேவதை முன்னே
மன்மதன் வர
சிந்திய புன்னகை இது!
அதன் விலை எது?
நான்தான் அது!
நான்தான் அது!
புன்னகை முன்னே சொல்லி நிற்க
இலவசமாய் இணைகிறது
இன்னும் பெரும் புன்னகை!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment