Thursday, April 19, 2018

பெண்மையைப்போற்றுவோம்

பெண்மையைப்போற்றுவோம்


அரசு விடுமுறை அவளுக் கில்லை!
       துணிகள் துவைக்கச் சம்பள மில்லை!
புகையும் பிடிக்கிறாள் அடுப்படி உள்ளே!
       இருமல் கண்ணீர் நகர்த்திட வில்லை!
மெழுகென வுரைத்தோம் சிலையா யில்லை!
       எரிந்தொளி தந்தவளில் விடிய லில்லை!

குடிப்பவன் வாய்க்க குடும்பம் காக்கிறாள்!
       குடும்பத்திற் காக இலட்சியம் துறக்கிறாள்!
வானிலு மேறுவாள்! நாட்டையு மாளுவாள்!
       உடன்பிறந்தார்க் குழைத்து முதிர்க்கன்னி யானதேனோ?
தேய்ந்ததும் வளர்பிறை ஆகிறதிங்கே! - தேய்ந்திட்ட
       நிலவெனும்பெண் வளராள்! தியாகப்பெண்மை போற்றுவோம்!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...