Sunday, April 22, 2018

வாழ்க நம் நட்பு!

வாழ்க நம் நட்பு!

ஓடும் மேகம்
ஓரிரு நொடி நின்று
நம்மை வேடிக்கை பார்க்கும்;
நேசம் நிறைந்த நட்பு வாழும்
இவ்விடம்
மழை பொழிவோமென!

வருவதற்கு
வாகனம் இருந்திருந்தால்
வானத்துச்சந்திரன்
நட்சத்திர நட்பை முறித்து
நம்மிடம் வந்திருப்பான்!

எதிர் வந்த எமன் கூட
உண்மையான நண்பர்கள்
வாழட்டுமென
ஆயுட்காலம் நீட்டிச்செல்வான்!

நாலாபுறம் சிதறும் குண்டுகள்
நட்பிருந்தால்
நலிந்து போயிருக்கும்;
அவர்கள்
நம்மைப்பார்த்து
கற்றுக்கொள்ளட்டும்!

வா நண்பா!
வாழ வேண்டும் நூறு ஆண்டு!
நீ மட்டுமல்ல;
நம் நட்பும்!
வாழ்க பல்லாண்டு!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...