தாய் மண்ணே வணக்கம்-தமிழ் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தேய் வில்லை உனக்கும்
சேய் கோடி இருக்கோம்
நாய் போலே இருப்போம்
வாய் சொல்லும் உன்சொல்
மெய் வீழும் உன்கால்
மாய் வுண்டு எமக்கே
சாய் வில்லைத் தமிழே
தேய் வில்லை உனக்கும்
சேய் கோடி இருக்கோம்
நாய் போலே இருப்போம்
வாய் சொல்லும் உன்சொல்
மெய் வீழும் உன்கால்
மாய் வுண்டு எமக்கே
சாய் வில்லைத் தமிழே
ஓர் எழுத்தும் ஒருபொருளே
ஈர் அடிகள் இவ்வுலகே
ஊர் வந்த மேநாட்டார்
பேர் மாற்றித் தமிழானார்
பார் மருண்ட பரங்கியர்
நேர் நில்லார் பாரதிக்கு
ஏர் ஓட்டோன் நாவிலும்
தேர்ந் தெழுமே நாட்டுப்புறம்
ஈர் அடிகள் இவ்வுலகே
ஊர் வந்த மேநாட்டார்
பேர் மாற்றித் தமிழானார்
பார் மருண்ட பரங்கியர்
நேர் நில்லார் பாரதிக்கு
ஏர் ஓட்டோன் நாவிலும்
தேர்ந் தெழுமே நாட்டுப்புறம்
குமிழ் போலே வெடியாது
சிமிழ் போலே குறுகாது
உமிழ்த் தேனே அஃதேயது
அமிழ் செயும் அதேயது
அமிழ் தம்தான் உண்டீரோ
தமிழ் மாந்தர் உண்டவரே
அமிழ்ந் தோமே உன்னுள்
தமிழ் மண்ணே வணக்கம்
சிமிழ் போலே குறுகாது
உமிழ்த் தேனே அஃதேயது
அமிழ் செயும் அதேயது
அமிழ் தம்தான் உண்டீரோ
தமிழ் மாந்தர் உண்டவரே
அமிழ்ந் தோமே உன்னுள்
தமிழ் மண்ணே வணக்கம்
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment