விளையாட்டாய்ப் பசியென்றேன் அம்மா!
குருதி வெளுத்து ஊட்டினாயே!
குறைக ளின்றித் தேற்றினாயே!
விதிகள் சதிகள் செய்திடவே
வீதி வந்து நாமமர்ந்தோம்!
சேலைக் குடையே வெயில்மழைக்கு!
சோலைக் குயில்நீ நானுறங்குதற்கு!
கொஞ்சங் கிடைத்த சோற்றையுமே
கொஞ்சி ஊட்டியுன் பசிமறப்பாய்!
இன்று ஏதும் இல்லையென்றால்
ஒன்றும் இல்லை தாய்ப்பசுவே!
கலங்காதே! விளையாட்டாய்ப் பசியென்றேன்!
உன்முகத்தைப் பார்த்தேநான் பசிமறப்பேன்!
- சரவணபெருமாள்
குருதி வெளுத்து ஊட்டினாயே!
குறைக ளின்றித் தேற்றினாயே!
விதிகள் சதிகள் செய்திடவே
வீதி வந்து நாமமர்ந்தோம்!
சேலைக் குடையே வெயில்மழைக்கு!
சோலைக் குயில்நீ நானுறங்குதற்கு!
கொஞ்சங் கிடைத்த சோற்றையுமே
கொஞ்சி ஊட்டியுன் பசிமறப்பாய்!
இன்று ஏதும் இல்லையென்றால்
ஒன்றும் இல்லை தாய்ப்பசுவே!
கலங்காதே! விளையாட்டாய்ப் பசியென்றேன்!
உன்முகத்தைப் பார்த்தேநான் பசிமறப்பேன்!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment