Saturday, April 28, 2018

கனவுக்குள் ஒரு பூகம்பம்

கனவுக்குள் ஒரு பூகம்பம்


உடற்விழி திறந்த உயிரெனவே - நான்
      உளவிழி திறவ பள்ளி சென்றேன்!
உலகுக்கே விளம்பரம் இலவசக் கல்வி
      உண்மையில் அதுவொரு வியாபாரமே!

தாயவள் மடியிலே நித்தமும் உறங்கி
      தடையில்லாத் தூக்கமும் நானுங் கண்டேன்!
தவறித்தான் போனதே தாயவள் அன்பு
      தட்டிப் பறித்தது விதிச்சதியே!

வாழ்வினைக் கடத்திட வேலைக்குச் சென்றிட
      வந்து போனேன் நான் கல்லூரிக்கு!
பட்டமும் வந்தது! சான்றிதழ் வந்தது!
      எப்போது வேலை வருமெனக்கு?

கனவிலே பூகம்பம் தாங்கிய படியே
      கால்களும் நகர்ந்தன நிலவழியே! - அங்கே
வானையே நம்பியே வயக்காடு வீற்ற
      விவசாயி வாழ்வு பேரழிவே!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...