ஏதோ நினைத்து...!
தனிமையே!
உன்னைத்தழுவுதா மன்னவா?
ஏதோ நீ நினைத்து
ஏனடா அமர்ந்தாய் தனியாய்?
சோகம் விட்டு வா!
உன்னைத்தழுவுதா மன்னவா?
ஏதோ நீ நினைத்து
ஏனடா அமர்ந்தாய் தனியாய்?
சோகம் விட்டு வா!
தேன் துளி மேகம் நான்!
உன் மேல் துளி ஊற்றவா?
உன் மேல் துளி ஊற்றவா?
பால் விழும் நிலவு நான்!
உன் தாகத்தில் நுழையவா?
உன் தாகத்தில் நுழையவா?
காதலின் வாயிலில் நின்று
பன்னீரைத் தெளித்தழை வாரேன்!
பன்னீரைத் தெளித்தழை வாரேன்!
பூக்களில் கம்பளம் விரித்து
கைவிரல் கோர்த்தழை வாரேன்!
கைவிரல் கோர்த்தழை வாரேன்!
சாரலும் வெய்யலும்
பூமியின் மத்தியில்
ஒன்றாய் கலப்பதும் உண்டு!
பூமியின் மத்தியில்
ஒன்றாய் கலப்பதும் உண்டு!
முதலும் முடிவும்
வார்த்தையில் உண்டு!
இன்பத்தில் நமக்கது இல்லை!
வார்த்தையில் உண்டு!
இன்பத்தில் நமக்கது இல்லை!
பனிப்புகை மல்லி நான்!
உன் வாசனைத் திரவியம்!
உன் வாசனைத் திரவியம்!
கசந்திடும் வேம்பில் நான்
நீ சுவைத்திடும் தேன் கனி!
நீ சுவைத்திடும் தேன் கனி!
மயில்களின் தோகைகள் கோர்த்து
சாமரம் வீசு நான் வாரேன்!
சாமரம் வீசு நான் வாரேன்!
குயில்களின் குரலொலி பழகி
தலையணை உதட்டினில் தாரேன்!
தலையணை உதட்டினில் தாரேன்!
மைவிழி சாயத்தில்
கருமைகள் குறைந்தால்
காக்கையின் சிறகுகள் போதும்!
கருமைகள் குறைந்தால்
காக்கையின் சிறகுகள் போதும்!
நெற்றியின் இடைவெளி
குங்குமம் நீ இட
காத்துக்கிடப்பதும் போதும்!
குங்குமம் நீ இட
காத்துக்கிடப்பதும் போதும்!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment