நான் ஐநா சபைத் தலைவரானால்
ஆசனம் அழைத் தெம்மை
அங்கே யமர்த் திட்டால்
அன்பே ஐநாக் குறியாய்
ஆகுங் காலம் விடியும்
ஈழம் உடனே யமையும்
நீதி அன்றே விடியும்
தமிழரை யழித்த கைகள்
மக்கள் முன்னே ஒடியும்
அங்கே யமர்த் திட்டால்
அன்பே ஐநாக் குறியாய்
ஆகுங் காலம் விடியும்
ஈழம் உடனே யமையும்
நீதி அன்றே விடியும்
தமிழரை யழித்த கைகள்
மக்கள் முன்னே ஒடியும்
சிரியாக் குழந்தை மரணம்
தந்தவர் தலைகள் உருளும்
மதங்கள் நுழையும் இடத்தின்
வாசற் கதவுக ளடையும்
தீவிர வாதக் கோட்டை
பேச்சு வார்த்தையில் தகரும்
வெள்ளைக் கொடிகள் எல்லாம்
ஓய்வாய் உறங்கச் செல்லும்
தந்தவர் தலைகள் உருளும்
மதங்கள் நுழையும் இடத்தின்
வாசற் கதவுக ளடையும்
தீவிர வாதக் கோட்டை
பேச்சு வார்த்தையில் தகரும்
வெள்ளைக் கொடிகள் எல்லாம்
ஓய்வாய் உறங்கச் செல்லும்
அகதிகள் என்றொரு வார்த்தை
அடுத்த தலைமுறை மறக்கும்
யாரும் எந்த நாடும்
சென்றே வாழ முடியும்
கடவுச் சீட்டு வேண்டாம்
நாடுகள் கடக்க முடியும்
வன்முறை யொழிந்த உலகில்
ஆவண மிங்கே யெதற்கு?
அடுத்த தலைமுறை மறக்கும்
யாரும் எந்த நாடும்
சென்றே வாழ முடியும்
கடவுச் சீட்டு வேண்டாம்
நாடுகள் கடக்க முடியும்
வன்முறை யொழிந்த உலகில்
ஆவண மிங்கே யெதற்கு?
உலக மொழிகள் பிழைக்கும்
தமிழ்த்தாய் மொழியாய் நிலைக்கும்
ஆதித் தமிழர் முறைகள்
மீண்டும் உலகை நடத்தும்
உலகே பசுமை ஆக
உன்னதத் திட்டம் பிறக்கும்
விலங்கு பறவை எல்லாம்
வீட்டு உறுப்பின ராகும்
தமிழ்த்தாய் மொழியாய் நிலைக்கும்
ஆதித் தமிழர் முறைகள்
மீண்டும் உலகை நடத்தும்
உலகே பசுமை ஆக
உன்னதத் திட்டம் பிறக்கும்
விலங்கு பறவை எல்லாம்
வீட்டு உறுப்பின ராகும்
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment