Thursday, April 19, 2018

நான் ஐநா சபைத் தலைவரானால்

நான் ஐநா சபைத் தலைவரானால்


ஆசனம் அழைத் தெம்மை
         அங்கே யமர்த் திட்டால்
அன்பே ஐநாக் குறியாய்
         ஆகுங் காலம் விடியும்
ஈழம் உடனே யமையும்
         நீதி அன்றே விடியும்
தமிழரை யழித்த கைகள்
         மக்கள் முன்னே ஒடியும்

சிரியாக் குழந்தை மரணம்
         தந்தவர் தலைகள் உருளும்
மதங்கள் நுழையும் இடத்தின்
         வாசற் கதவுக ளடையும்
தீவிர வாதக் கோட்டை
         பேச்சு வார்த்தையில் தகரும்
வெள்ளைக் கொடிகள் எல்லாம்
         ஓய்வாய் உறங்கச் செல்லும்

அகதிகள் என்றொரு வார்த்தை
         அடுத்த தலைமுறை மறக்கும்
யாரும் எந்த நாடும்
         சென்றே வாழ முடியும்
கடவுச் சீட்டு வேண்டாம்
         நாடுகள் கடக்க முடியும்
வன்முறை யொழிந்த உலகில்
         ஆவண மிங்கே யெதற்கு?

உலக மொழிகள் பிழைக்கும்
         தமிழ்த்தாய் மொழியாய் நிலைக்கும்
ஆதித் தமிழர் முறைகள்
         மீண்டும் உலகை நடத்தும்
உலகே பசுமை ஆக
         உன்னதத் திட்டம் பிறக்கும்
விலங்கு பறவை எல்லாம்
         வீட்டு உறுப்பின ராகும்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...