Sunday, April 22, 2018

தமிழே எங்கள் உயிர்மூச்சு!

தமிழே எங்கள் உயிர்மூச்சு!

கரையைத் தாண்டும் கடல்நீரும்
          கட்டுண்டு கிடந்திடும் நாள்பல!
கடலைத் தாண்டிக் கண்டந்தாவும்
          கன்னித்தமிழ் கட்டிட யார்உல?
குகைகளில் நுழைந்து பாரும்;
          மலையெங்கும் எந்தாய்த் தமிழே!
தரையைக் குடைந்து பாரும்;
          மட்காத எந்தமிழ்ச் சுவடிகளே!

மரத்தில் பிறந்த பிராணம்
          இன்றியும் வாழ்வோம் ஓரிருநொடி!
உயிருள் உறைந்த தமிழும்
          இல்லையேல் முடிந்திருக்கும் மரணம்!
ஊமையாய்ப் பிறந்தும் இருந்தால்
          உயிரை என்றோ மாய்த்திருப்போம்!
உன்னதத் தமிழை உச்சரியா
          உயிரும் இருந்து என்னபயன்?

ஊமையாய்ப் பிறப்பது விதியேயென்றால்
          மாடாய்ப் பிறந்து அம்மாவென்போம்!
மரமாய்ப் பிறப்பது உறுதியென்றால்
          தமிழ்க்கவி புரளும் காகிதமாவோம்!
சொர்க்கத்தில் தமிழ்மொழி இல்லையென்றால்
          முக்தியும் வேண்டுடாமென்றே பிறப்போம்!
மறுபடி பிறப்பு தமிழில்லையென்றால்
          மறுநொடிமாண்டு தமிழனாய்ப் பிறந்திடுவோம்!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...