மனிதம் மறந்தார்
ஏனென்று தெரியாது!
கள்ளங்கள் அறியாது!
கண்சிமிட்டு போதும்;
கன்னக்குழி சிரிப்பு பரிசாகும்!
காதலென்று தெரியாது!
காமமென்று அறியாது!
சுமக்கின்ற முத்தங்கள்
கபடமென்று அறியாது!
கயமைத்தனம் புரியாது!
பிஞ்சுமுகம் நோக்கியவர்
பித்தாய்த்தான் போனதுண்டு!
கலிகாலம்!
நஞ்சுமுகம் உடுத்தவரே
பஞ்சணைக்குப் பிஞ்சழைத்தார்!
பால்முகத்தை காமப்பாலாக்கி
பலியாக்கி
மனிதம் மறந்தார்!
- சரவணபெருமாள்
ஏனென்று தெரியாது!
கள்ளங்கள் அறியாது!
கண்சிமிட்டு போதும்;
கன்னக்குழி சிரிப்பு பரிசாகும்!
காதலென்று தெரியாது!
காமமென்று அறியாது!
சுமக்கின்ற முத்தங்கள்
கபடமென்று அறியாது!
கயமைத்தனம் புரியாது!
பிஞ்சுமுகம் நோக்கியவர்
பித்தாய்த்தான் போனதுண்டு!
கலிகாலம்!
நஞ்சுமுகம் உடுத்தவரே
பஞ்சணைக்குப் பிஞ்சழைத்தார்!
பால்முகத்தை காமப்பாலாக்கி
பலியாக்கி
மனிதம் மறந்தார்!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment