Wednesday, April 25, 2018

மனிதம் மறந்தார்

மனிதம் மறந்தார்
ஏனென்று தெரியாது!
கள்ளங்கள் அறியாது!
கண்சிமிட்டு போதும்;
கன்னக்குழி சிரிப்பு பரிசாகும்!

காதலென்று தெரியாது!
காமமென்று அறியாது!
சுமக்கின்ற முத்தங்கள்
கபடமென்று அறியாது!
கயமைத்தனம் புரியாது!

பிஞ்சுமுகம் நோக்கியவர் 
பித்தாய்த்தான் போனதுண்டு!
கலிகாலம்!
நஞ்சுமுகம் உடுத்தவரே
பஞ்சணைக்குப் பிஞ்சழைத்தார்!

பால்முகத்தை காமப்பாலாக்கி
பலியாக்கி
மனிதம் மறந்தார்!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...