சோறு கொண்டு போற புள்ள 2 - கிராமியக்கவிதை
மஞ்சள பூசிட்டு மச்சான தேடிட்டு
மத்தியானச் சோறு கொண்டு போற
நெஞ்சுல ஒன்னத்தான் தூக்கிச் சொமக்குற
மச்சான் இங்கருக்கேன் தாண்டிப் போற
மத்தியானச் சோறு கொண்டு போற
நெஞ்சுல ஒன்னத்தான் தூக்கிச் சொமக்குற
மச்சான் இங்கருக்கேன் தாண்டிப் போற
கண்டாங்கிச் சேலைல புத்தி கெட்டுப்போச்சு
முந்தாங்கில விட்டேன் கத்திக் கப்பல்
வீட்டுல விட்டது காட்டுல சிக்குது
கட்டி யணைச்சா முத்தச் சொக்கல்
முந்தாங்கில விட்டேன் கத்திக் கப்பல்
வீட்டுல விட்டது காட்டுல சிக்குது
கட்டி யணைச்சா முத்தச் சொக்கல்
அலுத்துப் போயி மச்சான் ஒக்காந்துபுட்டேன்
சோறு அள்ளிக் கொஞ்சம் ஊட்டுபுள்ள
அச்சச்சோ ஊட்டேல கைய கடிச்சுப்புட்டேன்
முத்தம் மருந்தாத் தாரேன் புள்ள
சோறு அள்ளிக் கொஞ்சம் ஊட்டுபுள்ள
அச்சச்சோ ஊட்டேல கைய கடிச்சுப்புட்டேன்
முத்தம் மருந்தாத் தாரேன் புள்ள
வெஞ்சனம் என்னடி கொண்டு வந்த - அது
ஒன்னத் தொட்டுக்கிறது போல இல்ல
கஞ்சத்தனம் ஏதும் மாமங்கிட்ட வேணாம்
கன்னத்தக் கொண்டாடி கடிச்சிக் கிற
ஒன்னத் தொட்டுக்கிறது போல இல்ல
கஞ்சத்தனம் ஏதும் மாமங்கிட்ட வேணாம்
கன்னத்தக் கொண்டாடி கடிச்சிக் கிற
ஆலமரத்தோட ஆணி வேரு போல
ஆச வெச்சுப்புட்டேன் ஒம்மேல தான்
பாயிமேல வெச்ச ஆச இல்ல
ஒன்நெஞ்சுக் குழியில தங்கிடத் தான்
ஆச வெச்சுப்புட்டேன் ஒம்மேல தான்
பாயிமேல வெச்ச ஆச இல்ல
ஒன்நெஞ்சுக் குழியில தங்கிடத் தான்
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment