Wednesday, April 25, 2018

மலர்களைக் காப்போம்

மலர்களைக் காப்போம்


மலர் காக்க மன்றம் வைத்தால்
மதம் பிடித்த மிருகக் கூட்டம்
மலரும் முன்னே மொட்டு பிய்த்து
மணம் நுகர மதிகெட்டுத் திரிகிறதே!

வலியாது தேனுறிஞ்சும் வண்டு கூட
வழிவிடா மலரிதழைத் தீண்ட லாகாது!
வலுவோடு வஞ்சிதழை வாழ் வழிக்க
வந்திட்டால் வழிமறித்து வேலெனவே தாக்கிடுவோம்!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...