என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்
வெய்யோனே! வேளை தவறாதோனே!
வெளிநாடு போனவனைப் பார்த்தாயோ?
நிலவோனே! நித்திரை ரசிப்போனே!
நிதமுணவு உண்பானோ? அறிவாயோ?
மழைமகளே! மகனவனைக் கண்டாயோ?
மழைசேராதே! தீண்டாது விடுவாயோ?
வளியோனே! விழிப்பார்வை மறைந்தோனே!
வந்தமாசு வடித்தேயவன் மூச்சாவாயோ?
காடுகரை காலிறக்கி காசாக்கி
கடல்தாண்டி அனுப்பினேனே ராசாத்தி!
கைபேசி ஒன்றனுப்பி அவன்பேச
கண்ணீர்தான் வந்ததடி, நாவடக்கம்!
கன்னத்தில் கைவைத்து பகலெல்லாம்
கண்ணிமையாது கைபேசி பார்த்தேனே!
நள்ளிரவில் அடித்தமணி அடங்கிடவே
நுன்மகனிடம் அதைக்காட்ட நிறுவனமாம்!
வீடுண்டு! காடுண்டு! அன்புத்தோழியே!
உடலுண்டு! உயிருண்டு! அவனில்லையே!
வெளிநாடு அனுப்பிய வீராப்பெனக்கு
அந்திமாலை வந்ததுமே அடங்கிப்போனதே!
அய்யய்யய்யா! அம்மம்மம்மா! அப்பப்பப்பா!
என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்!
வந்திடுவான்! கண்டிப்பாக வந்திடுவான்!
வாடா!தங்கமே! வருவான்! அவன்வருவான்!
- சரவணபெருமாள்
வெய்யோனே! வேளை தவறாதோனே!
வெளிநாடு போனவனைப் பார்த்தாயோ?
நிலவோனே! நித்திரை ரசிப்போனே!
நிதமுணவு உண்பானோ? அறிவாயோ?
மழைமகளே! மகனவனைக் கண்டாயோ?
மழைசேராதே! தீண்டாது விடுவாயோ?
வளியோனே! விழிப்பார்வை மறைந்தோனே!
வந்தமாசு வடித்தேயவன் மூச்சாவாயோ?
காடுகரை காலிறக்கி காசாக்கி
கடல்தாண்டி அனுப்பினேனே ராசாத்தி!
கைபேசி ஒன்றனுப்பி அவன்பேச
கண்ணீர்தான் வந்ததடி, நாவடக்கம்!
கன்னத்தில் கைவைத்து பகலெல்லாம்
கண்ணிமையாது கைபேசி பார்த்தேனே!
நள்ளிரவில் அடித்தமணி அடங்கிடவே
நுன்மகனிடம் அதைக்காட்ட நிறுவனமாம்!
வீடுண்டு! காடுண்டு! அன்புத்தோழியே!
உடலுண்டு! உயிருண்டு! அவனில்லையே!
வெளிநாடு அனுப்பிய வீராப்பெனக்கு
அந்திமாலை வந்ததுமே அடங்கிப்போனதே!
அய்யய்யய்யா! அம்மம்மம்மா! அப்பப்பப்பா!
என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்!
வந்திடுவான்! கண்டிப்பாக வந்திடுவான்!
வாடா!தங்கமே! வருவான்! அவன்வருவான்!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment