Thursday, April 19, 2018

அழகுப்பதுமைகள்

அழகுப்பதுமைகள்



பதுமையுடன் பவனிக்கும் பட்டழகு குழவியது
புதுமையுடன் பதம்பாடி பித்தாக்கும் குரலுமது
விதங்கேட்ட கவிவாயும் விளிக்கின்ற பொய்யுமது
எதுகையுடன் மோனையையும் எடுத்தியம்பும் கவிதையிது

- சரவணபெருமாள்

பதுமை              - பொம்மை
பவனி                - ஊர்வலம், உலா போன்று; தேர் பவனி வருகிறதென்று உரைப்போம் அல்லவா!
பட்டழகு             - பட்டுப்புழு போல் அழகு
குழவி                 - குழந்தை
பதம்பாடி           - பாடல் பாடி (சொற்பதம், பொருட்பதம் போன்று)
பித்தனாக்கும்  - பைத்தியமாக்கும்
விதங்கேட்ட    - முந்தைய அடியின் இறுதி அடியுடன் தொடர்பு படுத்திக்கொள்க; குரலதன் விதங்கள் கேட்ட
கவிவாயும்       - கவிஞர்கள் வாயும்
விளிக்கின்ற    - சொல்கின்ற; இயம்புகின்ற

பொம்மையுடன் பவனிவரும் பட்டுப்புழு போன்ற அழகான குழந்தையின், பதம்போல் பாடலாய் தோன்றும்,நம்மை பித்தனாக்கும் புத்தம் புது குரலொலியின் விதங்கள் கேட்ட கவிஞர்கள் வாய்கூட பொய்யுரைக்க தயாராகும்; அந்த குரல் "எதுகையுடன் மோனையையும் எடுத்தியம்பும் கவிதை இது" என்று.

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...