அழகுப்பதுமைகள்
பதுமையுடன் பவனிக்கும் பட்டழகு குழவியது
புதுமையுடன் பதம்பாடி பித்தாக்கும் குரலுமது
விதங்கேட்ட கவிவாயும் விளிக்கின்ற பொய்யுமது
எதுகையுடன் மோனையையும் எடுத்தியம்பும் கவிதையிது
புதுமையுடன் பதம்பாடி பித்தாக்கும் குரலுமது
விதங்கேட்ட கவிவாயும் விளிக்கின்ற பொய்யுமது
எதுகையுடன் மோனையையும் எடுத்தியம்பும் கவிதையிது
- சரவணபெருமாள்
பதுமை - பொம்மை
பவனி - ஊர்வலம், உலா போன்று; தேர் பவனி வருகிறதென்று உரைப்போம் அல்லவா!
பட்டழகு - பட்டுப்புழு போல் அழகு
குழவி - குழந்தை
பதம்பாடி - பாடல் பாடி (சொற்பதம், பொருட்பதம் போன்று)
பித்தனாக்கும் - பைத்தியமாக்கும்
விதங்கேட்ட - முந்தைய அடியின் இறுதி அடியுடன் தொடர்பு படுத்திக்கொள்க; குரலதன் விதங்கள் கேட்ட
கவிவாயும் - கவிஞர்கள் வாயும்
விளிக்கின்ற - சொல்கின்ற; இயம்புகின்ற
பவனி - ஊர்வலம், உலா போன்று; தேர் பவனி வருகிறதென்று உரைப்போம் அல்லவா!
பட்டழகு - பட்டுப்புழு போல் அழகு
குழவி - குழந்தை
பதம்பாடி - பாடல் பாடி (சொற்பதம், பொருட்பதம் போன்று)
பித்தனாக்கும் - பைத்தியமாக்கும்
விதங்கேட்ட - முந்தைய அடியின் இறுதி அடியுடன் தொடர்பு படுத்திக்கொள்க; குரலதன் விதங்கள் கேட்ட
கவிவாயும் - கவிஞர்கள் வாயும்
விளிக்கின்ற - சொல்கின்ற; இயம்புகின்ற
பொம்மையுடன் பவனிவரும் பட்டுப்புழு போன்ற அழகான குழந்தையின்,
பதம்போல் பாடலாய் தோன்றும்,நம்மை பித்தனாக்கும் புத்தம் புது குரலொலியின்
விதங்கள் கேட்ட கவிஞர்கள் வாய்கூட பொய்யுரைக்க தயாராகும்; அந்த குரல்
"எதுகையுடன் மோனையையும் எடுத்தியம்பும் கவிதை இது" என்று.
No comments:
Post a Comment