Tuesday, December 19, 2017

வாடாதே பூவே

வாடாதே பூவே
அழகான காட்சி
அழுகையுடன் தெரிகிறது

யாருக்காக இதழ் விரித்து
காத்துக்கிடக்கின்றன
இந்த இதழ்கள்

கடல் புயலில்
காணாமல் போன
தன்னினத்தை
தேடிப்பார்த்து கொண்டிருக்கின்றனவோ

கால்கள் முளைத்த
மாந்தரே
கடல்தேடி போகவியலோம்
தரையில் புதைந்துபோன
நீ எப்படி தேடப்போகிறாய்

நான் தேடிப்போனால்
சடலங்கள் மிதக்கும் கடலில்
உன் சந்ததி கண்டால்
மீட்டு வருகிறேன்
வருத்தம் கொள்ளாதே
வாட்டம் கொள்ளாதே பூவே

ஓரிரு நாட்கள் தான் வாழ்வு
அதுவும்
ஒன்றி வாழ முடியவில்லை என்று
ஏங்கிப்போகாதே
வாடிப்போகாதே
உன் இணை 
இறைவன் சேர்ந்திருக்கலாம்
உன்னையும் 
இறைவனிடம் சேர்க்கிறேன்
பூஜைக்கு தயாராகு பூவே

-  சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...