Thursday, December 21, 2017

ஏய்! கிளியே!

ஏய்! கிளியே!
கன்னியவள் கண்கள்
பார்த்திடும் போதே
காதலென்னும் பெயரில்
கவிதைகள் நூறே!

வானில் உள்ள
மேகம் குழம்பிடும்!
நிலவே!
எது நிலவே?

வானம் கூட
இறங்கி வந்திடும்
நிலவே!
உன் அருகே!

குளத்தில்
நிலவும் நீயும்
ரெட்டை நிலவு பிம்பமே!
ரெண்டின் ஒளியில் குளமே!
கார்த்திகை மாதமே!

அடடா!
மீன்கள்
உம்மை பார்த்து மயங்குமே!

தொங்குகின்ற கூந்தல்
பூக்களின் ஊஞ்சல்!
வந்துமோதும் தென்றல்
ஆட்டிவிடும் கைகள்!

ஆண்களுக்கு
நீயே வேடிக்கை!
தேரே!
தெரு வருதே!

பெண்களுக்கு
கோபம் வாடிக்கை!
தேவதையே!
உன் வரவே!

நடந்து போகும் பாதை
பனிக்காற்று வீசுமே!
கடந்து போன பின்னே
வெயில் அடிக்க தொடங்குமே!

ஏய்! கிளியே!
சொல்லேன்!
சொன்ன காதலை திரும்பவே!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...