காலைநேர நடைபயணம்
காலைநேரத்தில்
வீல்வீலென்ற சத்தம்
எதிர்வீட்டுக்குழந்தை கையில்
பரிதாபமாய் ஒரு நாய்க்குட்டி
தன்குழந்தை விளையாட
கடத்தி வரப்பட்ட குழந்தை
அந்த குட்டி நாய்க்குட்டி
வீல்வீலென்ற சத்தம்
எதிர்வீட்டுக்குழந்தை கையில்
பரிதாபமாய் ஒரு நாய்க்குட்டி
தன்குழந்தை விளையாட
கடத்தி வரப்பட்ட குழந்தை
அந்த குட்டி நாய்க்குட்டி
ஆதரவாய் தடவி
தண்ணீர் காட்ட
பாசமென்றெண்ணி
அவரை
உரசிக்கொண்டே குடிக்கிறது கிடா
பொங்கல் வருவதை அறியாமல்
தண்ணீர் காட்ட
பாசமென்றெண்ணி
அவரை
உரசிக்கொண்டே குடிக்கிறது கிடா
பொங்கல் வருவதை அறியாமல்
மாட்டுத்தொழுவத்தில்
பின்னால் நிற்கும்
கன்றுக்குட்டி
பசியாறுவதாய் எண்ணி
பால்ச்சட்டியை
நிரப்பிக்கொண்டிருக்கிறது பசு
பின்னால் நிற்கும்
கன்றுக்குட்டி
பசியாறுவதாய் எண்ணி
பால்ச்சட்டியை
நிரப்பிக்கொண்டிருக்கிறது பசு
முதலாளியை நம்பி
முட்டை வைத்துச்செல்கிறது
கோழி
அவித்து தின்னும்
ஆவலை அறியாமல்
முட்டை வைத்துச்செல்கிறது
கோழி
அவித்து தின்னும்
ஆவலை அறியாமல்
வாசலில்
எறும்பு புற்றைச்சுற்றி
வெண்ணிற விசக்கோடுகள்
ஐந்து மனித உயிர்
கடிபடாதிருக்க
நூறு எறும்புயிர்கள்
கொல்லப்பட்டிருந்தன
எறும்பு புற்றைச்சுற்றி
வெண்ணிற விசக்கோடுகள்
ஐந்து மனித உயிர்
கடிபடாதிருக்க
நூறு எறும்புயிர்கள்
கொல்லப்பட்டிருந்தன
கேட்பதற்கு ஆளில்லை
பூவிற்குள்
ஆள்துளை போடுகிறது வண்டு
தேனுறிஞ்ச
பூவிற்குள்
ஆள்துளை போடுகிறது வண்டு
தேனுறிஞ்ச
வரத்து வாய்க்கால் தொலைய
தாகத்தில் தரைபிளந்து
வறண்டு கிடக்கிறது
கண்மாய்
தாகத்தில் தரைபிளந்து
வறண்டு கிடக்கிறது
கண்மாய்
ஒவ்வொன்றாய் கண்டு
யோசித்தபடியே நடந்துவர
காலை நடைபயணம்
முடிந்து போனது
யோசித்தபடியே நடந்துவர
காலை நடைபயணம்
முடிந்து போனது
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment