மாயக்கண்ணா
உயிர்துறந்த புல்லுடலில் மூச்சிறக்கி
உயிர்மயங்கும் இசையமுது ஊட்டினாய்
மயில் உதிர்த்த இறகிரண்டு
நிலத்தில் காலூன்றி எழுந்தாடுதே
உன்னருகே பெண்போலே ஒன்றுள்ளதே
கற்சிலை சுற்றி வாசிக்கிறாயோ
கானத்தில் மயங்கிப்பெண் ஆடுகிறாளோ
ஆடியமாது மயங்கியே சிலையானாளோ
விடிக்க விழித்த ஞாயிறு
விசயம் மறந்து நின்றது
விடிகாலை விடியட்டும் கண்ணா
வித்தைக்குழல் ஊதல் நிறுத்திடு
கடற்கரையில் மாதொன்று நடக்க
காலருகே வந்த அலை
கடல்பரவிய குழலோசை மயங்கி
வந்தவரை வந்து திரும்பாதது
பூவொன்றை ஏந்தி பூந்தளிர்கரம்
நீளுது உன்னருகே கண்ணா
புல்லிசை நிறுத்தி விட்டாயோ
இசைமயக்கம் காதல் மயக்கம்
மாயக்கண்ணா கருமைநிற நிழலோ
கண்பசி ஆறிட சுயவடிகாட்டு
நிழலது காட்டி மயக்கி
நித்தமும் என்னை ஏமாற்றாதே
- சரவணபெருமாள்
உயிர்துறந்த புல்லுடலில் மூச்சிறக்கி
உயிர்மயங்கும் இசையமுது ஊட்டினாய்
மயில் உதிர்த்த இறகிரண்டு
நிலத்தில் காலூன்றி எழுந்தாடுதே
உன்னருகே பெண்போலே ஒன்றுள்ளதே
கற்சிலை சுற்றி வாசிக்கிறாயோ
கானத்தில் மயங்கிப்பெண் ஆடுகிறாளோ
ஆடியமாது மயங்கியே சிலையானாளோ
விடிக்க விழித்த ஞாயிறு
விசயம் மறந்து நின்றது
விடிகாலை விடியட்டும் கண்ணா
வித்தைக்குழல் ஊதல் நிறுத்திடு
கடற்கரையில் மாதொன்று நடக்க
காலருகே வந்த அலை
கடல்பரவிய குழலோசை மயங்கி
வந்தவரை வந்து திரும்பாதது
பூவொன்றை ஏந்தி பூந்தளிர்கரம்
நீளுது உன்னருகே கண்ணா
புல்லிசை நிறுத்தி விட்டாயோ
இசைமயக்கம் காதல் மயக்கம்
மாயக்கண்ணா கருமைநிற நிழலோ
கண்பசி ஆறிட சுயவடிகாட்டு
நிழலது காட்டி மயக்கி
நித்தமும் என்னை ஏமாற்றாதே
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment