Friday, December 22, 2017

மாயக்கண்ணா

மாயக்கண்ணா



உயிர்துறந்த புல்லுடலில் மூச்சிறக்கி
உயிர்மயங்கும் இசையமுது ஊட்டினாய்
மயில் உதிர்த்த இறகிரண்டு
நிலத்தில் காலூன்றி எழுந்தாடுதே

உன்னருகே பெண்போலே ஒன்றுள்ளதே
கற்சிலை சுற்றி வாசிக்கிறாயோ
கானத்தில் மயங்கிப்பெண் ஆடுகிறாளோ
ஆடியமாது மயங்கியே சிலையானாளோ

விடிக்க விழித்த ஞாயிறு
விசயம் மறந்து நின்றது
விடிகாலை விடியட்டும் கண்ணா
வித்தைக்குழல் ஊதல் நிறுத்திடு

கடற்கரையில் மாதொன்று நடக்க
காலருகே வந்த அலை
கடல்பரவிய குழலோசை மயங்கி
வந்தவரை வந்து திரும்பாதது

பூவொன்றை ஏந்தி பூந்தளிர்கரம்
நீளுது உன்னருகே கண்ணா
புல்லிசை நிறுத்தி விட்டாயோ
இசைமயக்கம் காதல் மயக்கம்

மாயக்கண்ணா கருமைநிற நிழலோ
கண்பசி ஆறிட சுயவடிகாட்டு
நிழலது காட்டி மயக்கி
நித்தமும் என்னை ஏமாற்றாதே

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...