அடைமழையில் ஒரு காலை
ஆழ்ந்து உறங்குகிறதோ
சூரியன்
அடைமழை
தூவி எழுப்புதே வானம்
அலுத்துப்போய் தூங்க
இராவெல்லாம் தூங்காமல்
எங்கே கதிரறுக்கப்போனதோ
அடுத்த நாளுக்கு
நாட்காட்டியும்
கடிகாரமும் நகர
அறிவிக்காமல் இருக்கிறதே
சூரியன்
வெளியே எட்டிப்பார்த்தால்
இருட்டியவானம்
கடிகாரத்தின் மேலொரு சந்தேகம்
கைபேசியை சோதனையிட
நேரம்சரி
என்மீதா
சந்தேகப்பட்டாயென்றே
கோபம் கொண்ட கடிகாரம்
ஓடாமல் நின்று போனது;
மின்கலம் காலாவதி
அலறும் காலைக்கடிகாரமே
சேவல்
அதும்கூட நடுங்கிப்போய்
சத்தமில்லாமல்
சுவற்றோரம் ஒன்றிப்போனதே
கோழி குவித்து வைத்த
இறக்கையின் உள்ளே
கதகதப்பாய்
இரண்டே நாளான குஞ்சுகள்
ஒன்றுமட்டும் தலையைநீட்டி
கண்களை விரித்தே
சுற்றிச்சுற்றி நோக்குகிறதே
கண்களை கசக்கியபடி
வாசற்படி வந்த
பக்கத்து வீட்டு மழலை
"அம்மா! மேலருந்து யாரோ
தண்ணிய வேஸ்டா கொட்ராங்க"
என்றே தன்னையறியாமல்
மழைநீர் சேகரிப்புக்கான
புரட்சி வரியொன்றைப்போட்டது
எதிர்வீட்டிலிருந்த சிறுவன்
"மழைக்கு பள்ளிக்கொடம் லீவுனு
டிவில சொல்லிட்டாங்க"
என்றே கத்த
தந்தையின் அதட்டலில் நிசப்தம்
அப்பாடா
கண்முழித்ததுபோல
சூரியன்
மெல்ல மெல்ல
வானத்தை
சூடுபடுத்த ஆரம்பித்துவிட்டான்
சாரலாய்
சடசடவென வந்த மழை
சொட்டுச்சொட்டாய் குறுக
தெருவில்
அங்கேயும் இங்கேயும்
ஆள் நடமாட்டம் தெரிய
கடைக்கு கிளம்பினேன்;
சூடான தேநீருக்காக
- இனிய காலை வணக்கங்களுடன்
சரவணபெருமாள்
ஆழ்ந்து உறங்குகிறதோ
சூரியன்
அடைமழை
தூவி எழுப்புதே வானம்
அலுத்துப்போய் தூங்க
இராவெல்லாம் தூங்காமல்
எங்கே கதிரறுக்கப்போனதோ
அடுத்த நாளுக்கு
நாட்காட்டியும்
கடிகாரமும் நகர
அறிவிக்காமல் இருக்கிறதே
சூரியன்
வெளியே எட்டிப்பார்த்தால்
இருட்டியவானம்
கடிகாரத்தின் மேலொரு சந்தேகம்
கைபேசியை சோதனையிட
நேரம்சரி
என்மீதா
சந்தேகப்பட்டாயென்றே
கோபம் கொண்ட கடிகாரம்
ஓடாமல் நின்று போனது;
மின்கலம் காலாவதி
அலறும் காலைக்கடிகாரமே
சேவல்
அதும்கூட நடுங்கிப்போய்
சத்தமில்லாமல்
சுவற்றோரம் ஒன்றிப்போனதே
கோழி குவித்து வைத்த
இறக்கையின் உள்ளே
கதகதப்பாய்
இரண்டே நாளான குஞ்சுகள்
ஒன்றுமட்டும் தலையைநீட்டி
கண்களை விரித்தே
சுற்றிச்சுற்றி நோக்குகிறதே
கண்களை கசக்கியபடி
வாசற்படி வந்த
பக்கத்து வீட்டு மழலை
"அம்மா! மேலருந்து யாரோ
தண்ணிய வேஸ்டா கொட்ராங்க"
என்றே தன்னையறியாமல்
மழைநீர் சேகரிப்புக்கான
புரட்சி வரியொன்றைப்போட்டது
எதிர்வீட்டிலிருந்த சிறுவன்
"மழைக்கு பள்ளிக்கொடம் லீவுனு
டிவில சொல்லிட்டாங்க"
என்றே கத்த
தந்தையின் அதட்டலில் நிசப்தம்
அப்பாடா
கண்முழித்ததுபோல
சூரியன்
மெல்ல மெல்ல
வானத்தை
சூடுபடுத்த ஆரம்பித்துவிட்டான்
சாரலாய்
சடசடவென வந்த மழை
சொட்டுச்சொட்டாய் குறுக
தெருவில்
அங்கேயும் இங்கேயும்
ஆள் நடமாட்டம் தெரிய
கடைக்கு கிளம்பினேன்;
சூடான தேநீருக்காக
- இனிய காலை வணக்கங்களுடன்
சரவணபெருமாள்
No comments:
Post a Comment