நெற்றி
பிறைதிருடிய பிரம்மன்
நெற்றி செதுக்க
மிச்சப்பிறை பாதுகாத்தே
தலையில் சூடினான் பித்தன்!
நெற்றியில் படர்ந்த முடி
நெற்றி வியர்வை துடைக்கும்
தலைமுடியின் கைவிரல்கள்!
வடிவமற்றதே நீர்ம!ம்
நெற்றியில் வழிய
வடிவம் பெறுகிறது
சாந்திப்பொட்டு!
நெற்றி வனப்பு,
அரங்கேற்ற மேடை!
எத்தனை விதம்?
நிதமொரு பொட்டின் அரங்கேற்றம்!
புருவத்தை நீ உயர்த்த
நெளியும் நெற்றிக்கோடுகள்
மனதை நெளிக்கும்
கவிதை வரிகள்!
நெற்றித்தழும்பு,
வழுக்கும் தேசத்தில்
ஒரு பளிங்குத்தரை!
நெற்றிச்சுட்டி,
பிறை பிடித்த
தொங்கும் தோட்டம்!
முகம்பூசிய மஞ்சள்,
பிறை மூடும் உறை!
பக்கவாட்டு வளைவு,
குயவனின் கைவண்ணம்!
கயிறு காட்டும் முன்னே
முந்திக்கொள்கிறது,
நெற்றி உச்சிக்குங்குமம்!
திருமதியா?
திருவளர்ச்செல்வியா? எனக்காட்ட!
நெற்றி,
குங்குமம் சூடாத வரை
ஆடவர் மனம் சமாதானமே;
நமக்கொரு வாய்ப்புள்ளதென!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment