கண்கள்
கள்ளத்தனம் மிகுந்ததடி!
பாராது போல் நடித்து
பார் சுருட்டும்
வித்தகக்கண்கள்,
கள்ளத்தனம் மிகுந்ததடி!
கண்களுக்கு
கவரி வீசும்
கண்ணிமைகள்,
சம்பளமற்ற தொழிலாளிகள்!
காதுக்கெனவும்
மூக்குக்கெனவும்
அணிகலன் போட்டு,
கண்களுக்கு
கரு மையோடு விட்டது,
ஓர வஞ்சனை!
கண்களில் மையும் ஏனடி?
கண்களே வசியம் செய்யும்போது
கண்ட மைகள் தேவைதானா?
ஒருதுளி கண்ணீர் வந்தாலும்
குளம்போல் நீரென
பொய்க்கவி
புனையவிட்ட கண்கள்,
வசியக்காரிகள் தான்!
நிலவிருக்கும் இடம்
வானம்தான்!
அதற்காக இப்படியா?
அதிக பிரசங்கித்தனம் மின்னல்
பிறைநெற்றியின் அடியில்
புருவமாய் வளைந்து நீற்கிற்து!
மின்வெட்டைச் சமாளிக்க
மின்னல்தேடி வருவாரென்று
புருவத்தில்
மையிட்டு மறைக்கிறாய்!
புத்திசாலிப்பெண்ணே!
கண்ணாடி பிரதேசமடி கண்கள்!
முன்னே வந்தபோது
முன்னிலைப்பிம்பம்,
முகம்பார்க்கும் கண்ணாடி!
தொலைக்காட்சிகள்
குவித்திடும் விழிப்புள்ளி,
குவி ஆடி!
கண்கள்
கவிதைச்சுரங்கம்!
அள்ள வந்த
எந்தக்கவிஞனும்
இல்லையென்று ஏமாறவில்லை!
கண்கள்
கயிறுகள் இன்றி
ஆண்களைக் கட்டியிழுக்கும்
பெண்களின் விஞ்ஞானம்!
கண்திறந்தும்
கனவு வருதடி!
உன் விழி நோக்க
புறப்பட்டதொரு அம்பு
இதயம் துளைக்கிறது!
பிடுங்கி எறிய முனைந்தேன்!
கண்ணிலும் சிக்கவில்லை!
கையிலும் சிக்கவில்லை!
வலிகள் நிச்சயம்!
அது சுக வலி!
காந்தியவாதி கண்கள்!
ஆயுதம் ஏந்தாமலே
ஆண்களை அடிக்கும்
அகிம்சைப் பேர்வழியான
பெண்ணாயுதம்!
கண்ணடிக்காதடி கண்மணியே!
சுளீரென்று
என்னில் வலிக்கிறது!
இமையில் நீண்ட ரோமங்கள்
தொடாமலே
இதயத்தை வருடும்
இறகுகள்!
மூடித்திறக்கும் இமைகள்
சிறகுகள் என்றெண்ணி
சிக்கியதோ நம்மினம் என்று
புறாக்கூட்டம் ஒன்று
குழுமுதடி!
மீன்தொட்டி போன்ற பள்ளத்தில்
தாவிட முடியாத
மீன்களடி,
உன் விழிகள்!
மீனே தூண்டில் போட
மீண்டிட முடியாத
மீனவனடி நான்!
கண்மணியே!
மொத்தத்தில்
கண்கள் என்னும்
காவல்துறை அமைத்தாய்!
காதல் என்னும்
சிறையில் அடைத்தாய்!
- சரவணபெருமாள்
கள்ளத்தனம் மிகுந்ததடி!
பாராது போல் நடித்து
பார் சுருட்டும்
வித்தகக்கண்கள்,
கள்ளத்தனம் மிகுந்ததடி!
கண்களுக்கு
கவரி வீசும்
கண்ணிமைகள்,
சம்பளமற்ற தொழிலாளிகள்!
காதுக்கெனவும்
மூக்குக்கெனவும்
அணிகலன் போட்டு,
கண்களுக்கு
கரு மையோடு விட்டது,
ஓர வஞ்சனை!
கண்களில் மையும் ஏனடி?
கண்களே வசியம் செய்யும்போது
கண்ட மைகள் தேவைதானா?
ஒருதுளி கண்ணீர் வந்தாலும்
குளம்போல் நீரென
பொய்க்கவி
புனையவிட்ட கண்கள்,
வசியக்காரிகள் தான்!
நிலவிருக்கும் இடம்
வானம்தான்!
அதற்காக இப்படியா?
அதிக பிரசங்கித்தனம் மின்னல்
பிறைநெற்றியின் அடியில்
புருவமாய் வளைந்து நீற்கிற்து!
மின்வெட்டைச் சமாளிக்க
மின்னல்தேடி வருவாரென்று
புருவத்தில்
மையிட்டு மறைக்கிறாய்!
புத்திசாலிப்பெண்ணே!
கண்ணாடி பிரதேசமடி கண்கள்!
முன்னே வந்தபோது
முன்னிலைப்பிம்பம்,
முகம்பார்க்கும் கண்ணாடி!
தொலைக்காட்சிகள்
குவித்திடும் விழிப்புள்ளி,
குவி ஆடி!
கண்கள்
கவிதைச்சுரங்கம்!
அள்ள வந்த
எந்தக்கவிஞனும்
இல்லையென்று ஏமாறவில்லை!
கண்கள்
கயிறுகள் இன்றி
ஆண்களைக் கட்டியிழுக்கும்
பெண்களின் விஞ்ஞானம்!
கண்திறந்தும்
கனவு வருதடி!
உன் விழி நோக்க
புறப்பட்டதொரு அம்பு
இதயம் துளைக்கிறது!
பிடுங்கி எறிய முனைந்தேன்!
கண்ணிலும் சிக்கவில்லை!
கையிலும் சிக்கவில்லை!
வலிகள் நிச்சயம்!
அது சுக வலி!
காந்தியவாதி கண்கள்!
ஆயுதம் ஏந்தாமலே
ஆண்களை அடிக்கும்
அகிம்சைப் பேர்வழியான
பெண்ணாயுதம்!
கண்ணடிக்காதடி கண்மணியே!
சுளீரென்று
என்னில் வலிக்கிறது!
இமையில் நீண்ட ரோமங்கள்
தொடாமலே
இதயத்தை வருடும்
இறகுகள்!
மூடித்திறக்கும் இமைகள்
சிறகுகள் என்றெண்ணி
சிக்கியதோ நம்மினம் என்று
புறாக்கூட்டம் ஒன்று
குழுமுதடி!
மீன்தொட்டி போன்ற பள்ளத்தில்
தாவிட முடியாத
மீன்களடி,
உன் விழிகள்!
மீனே தூண்டில் போட
மீண்டிட முடியாத
மீனவனடி நான்!
கண்மணியே!
மொத்தத்தில்
கண்கள் என்னும்
காவல்துறை அமைத்தாய்!
காதல் என்னும்
சிறையில் அடைத்தாய்!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment