கூந்தல்
பூச்சூடியதாய்
நீ நினைக்க
பூப்பல்லக்கு சுமப்பதாய்
பூ நினைத்துக்கொள்கிறது!
பூவாசம் தேடி
பூ வைத்தால்
பூவின் நாட்டமெல்லாம்
பூ வைத்தால்
பூவின் நாட்டமெல்லாம்
உன் கூந்தல் வாசமடி!
சீப்பை மாற்றடி
பெண்ணே!
சிக்குவது போல்
அடிக்கடி நடிக்கிறது!
கூந்தலை விட்டுவர
மனமில்லை போலும்!
கூந்தலில் இறுதிச்சுற்று
ஊஞ்சல் கயிறா?
உல்லாசமாய் ஆடுகிறது
ஊதாக்குப்பி!
முடியை விரித்துப்போட
காதல் கொண்ட காற்று
பறக்க கற்றுத்தருவதுபோல்
வழிகிறது கூந்தலிடம்!
எத்தனை புள்ளி
வைத்தாலும்
பின்னிய கூந்தல்
போலவே
நெளிகிறது கோலம்!
இடைக்கும் முடிக்கும்
என்னடி தனிநேசம்?
இடைதழுவதே!
அடிமுடி அடிக்கடி!
அடிமுடி அடிக்கடி!
காரிருட்டில் வருதே
நிலவு!
கருங்கூந்தல் நடுவே
உன்
உன்
கட்டழகு முகமே
நிலவு!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment