கால்மிதி தொட்ட பிஞ்சு
கெண்ட காலை தரையில் சாய்த்து
சுண்ட வெயிலில் நான் அமர்ந்தேன்
திண்ட வாயில் பிச்சை கேளேன்
கண்ட காலில் உழைத்தே வாழ்வேன்
உண்ட கையில் தொடுநிலை யானேன்
கண்ட இடத்தில் மிதியா செருப்பே
கெண்ட காலை தரையில் சாய்த்து
சுண்ட வெயிலில் நான் அமர்ந்தேன்
திண்ட வாயில் பிச்சை கேளேன்
கண்ட காலில் உழைத்தே வாழ்வேன்
உண்ட கையில் தொடுநிலை யானேன்
கண்ட இடத்தில் மிதியா செருப்பே
வறுமை வரவே எனையே மிதித்தே
பொறுமை யிழந்தே வந்தாய் கிழிந்தே
கல்லடி பட்ட விரிசலா கண்ணே
முள்ளடி பட்ட கிழிசலா செருப்பே
உள்ளடி சுத்தி யாணி வைத்தே
செல்லடி யாயுட் கூட்டித் தைத்தே
மரமேல் மாட்டிய பையை நிரப்ப
மரம்போல் காய்த்து பணம் இல்லை
இலவச கல்வி என்றால் கூட
இதென்று அதென்று செல வுண்டே
ஆதே அய்யா அமர்ந்தே னிங்கே
ஆருக்கும் செருப்பிழை தீர வாரும்
ஆண்டவன் முன்னே அனைவருஞ் சமம்
புனைந்தவன் எவனோ முன்னே வரும்
கண்டது யெங்கே சொலும் சொலும்
எனைத்தே பாரும் யெங்கே சமம்
எல்லார்க்கு மெல்லாந் தருவா னென்றால்
ஏழையும் எமும் எப்படி வந்தோம்
- சரவணபெருமாள்
( தமிழ்ப்பட்டறை குழுமம் கொடுத்த படக்கவிதை தலைப்புக்காக எழுதிய கவிதை)
பொறுமை யிழந்தே வந்தாய் கிழிந்தே
கல்லடி பட்ட விரிசலா கண்ணே
முள்ளடி பட்ட கிழிசலா செருப்பே
உள்ளடி சுத்தி யாணி வைத்தே
செல்லடி யாயுட் கூட்டித் தைத்தே
மரமேல் மாட்டிய பையை நிரப்ப
மரம்போல் காய்த்து பணம் இல்லை
இலவச கல்வி என்றால் கூட
இதென்று அதென்று செல வுண்டே
ஆதே அய்யா அமர்ந்தே னிங்கே
ஆருக்கும் செருப்பிழை தீர வாரும்
ஆண்டவன் முன்னே அனைவருஞ் சமம்
புனைந்தவன் எவனோ முன்னே வரும்
கண்டது யெங்கே சொலும் சொலும்
எனைத்தே பாரும் யெங்கே சமம்
எல்லார்க்கு மெல்லாந் தருவா னென்றால்
ஏழையும் எமும் எப்படி வந்தோம்
- சரவணபெருமாள்
( தமிழ்ப்பட்டறை குழுமம் கொடுத்த படக்கவிதை தலைப்புக்காக எழுதிய கவிதை)
No comments:
Post a Comment