Monday, October 30, 2017

நிதமொரு ஏமாற்றம்

நிதமொரு ஏமாற்றம்

வானைப்பார்த்து படுத்திருக்கிறேன்!
நிலவை 
மேகம் மறைக்க முயல
என் இமைகள்
எல்லாவற்றையும் மறைக்கும்
முயற்சியில் உள்ளன!

மூடிய பின்பும்
கண்களுக்கு உயிர் கொடுக்க
கனவுகள் காத்திருக்கின்றன!

கனவை சாக்குச்சொல்லி
நெருங்கும் முயற்சியில்
நீ உள்ளாய்!

நிஜமென நம்பி நான் முழிக்க
நிதமொரு ஏமாற்றமே எனக்கு!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...